Ramanathapuram

News September 18, 2024

கடும் வெயில்: உப்பு உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம் உப்பூர் திருப்புல்லாணி தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்கி பருவமழைக்கு முன்னதாக உப்பு உற்பத்தி நடைபெறும். இந்நிலையில் கோடைகாலம் முடிந்து 3 மாதங்களாகியும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாவட்டம் முழுவதும் மீண்டும் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் பாத்திகளில் உப்பை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News September 18, 2024

இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்த 3 இலங்கை மீனவர்கள் கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து சென்றபோது மண்டபத்திற்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் வந்த படகினை சோதனை செய்தனர். அந்த படகில் இருந்த 3 பேரும் இலங்கை யாழ்ப்பாணம் தாலையடி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News September 18, 2024

அரசு டவுன் பஸ் – டூவீலர் மோதல்: ஒருவர் பலி

image

வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மீரான் முகைதீன், 42. இன்றிரவு இவர் டூவீலரில் கீழக்கரையில் இருந்து வாலிநோக்கம் திரும்பினார். கீழக்கரை தாலுகா அலுவலகம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் டூவீலர் மீது மோதியதில் மீரான் முகைதீன் இறந்தார். கீழக்கரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News September 17, 2024

இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை

image

இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள DEO, டிரைவர், கிளீனர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 41 பணியிடங்கள் உள்ள இந்த பணிக்கு 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 24ஆம் தேதிக்குள் இராமநாதபுரம் மாவட்ட சுகாதார அலுவலருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 17, 2024

மண்டபம் – கடலூர் ரயில் சோதனை ஓட்டம்

image

மண்டபம் -கடலூர் மாதாந்திர ரயில் சோதனை ஓட்டம் இன்று (செப்.17) நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6:30 மணியளவில் காரைக்குடி ரயில் நிலையத்தில் புறப்படும் ஆய்வு ரயில் மண்டபம் நிலையத்திற்கு காலை 08:30 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் காலை 9:30 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, மயிலாடுதுறை வழியாக கடலூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.

News September 16, 2024

திருமாவளவன் மீது பாஜக நிர்வாகி பாய்ச்சல்

image

இராமநாதபுரத்தில் இன்று செய்தியாரிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம், விசிக தலைவர் திருமாவளவன் வரும் தேர்தலில் திமுகவிடம் அதிக சீட்டுகளைப் பெறவே மது ஒழிப்பு நாடகத்தை நடத்தி வருகிறார். மது ஒழிக்கப்பட வேண்டும் என அவர் உண்மையில் நினைத்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். இந்நேரம் திமுகவினர் நடத்தி வரும் மது ஆலைகள் முன் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என குற்றம் சாட்டினார்.

News September 16, 2024

இராமேஸ்வரம்: விடுமுறை நாட்களில் குவிந்த பக்தர்கள்

image

இராமேஸ்வரத்தில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் நேற்று(செப்.15) ஏராளமான பக்தர்கள் புனித நீராடி 21 புன்னிய தீர்த்தங்களில் நீராட நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி தரிசனம் செய்தனர்.

News September 16, 2024

காணாமல் போன படகில் சடலம்

image

ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர், தனது பைபர் படகு கடந்த செப்., 11-ம் தேதி காணாமல் போனதாக புகார் அளித்தார். இப்படகு புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கடல் பகுதிகளில் மர்மநபர் ஒருவர் இறந்த நிலையில் சென்றுள்ளது. அங்குள்ள மீனவர்கள் பத்திரமாக படகினை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இறந்த நபர் குறித்து ராமேஸ்வரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2024

இராமநாதபுரத்தில் 999 வழக்குகளுக்கு தீர்வு

image

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 10 இருக்கைகள் அமைக்கப்பட்டு குடும்ப நல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாராக் கடன் வழக்கு, சிவில் என 4172 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 999 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 8 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரத்து 507 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

News September 14, 2024

ராம்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வு : 3,752 பேர் ஆப்சென்ட்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 மையங்களில் 56 அறைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று(செப்.14) நடந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 15,657 பேரில் 11,905 பேர் மட்டும் பங்கேற்றனர். கண்காணிப்பு அலுவலர்கள் 2 பேர் தலைமையில் 55 தேர்வு மைய பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 13 நடமாடும் கண்காணிப்பு குழு, 2 பறக்கும் படை குழு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

error: Content is protected !!