Pudukkottai

News August 14, 2024

அரசு பள்ளி முன்பு மாணவன் மீது தாக்குதல்

image

புதுக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் நேற்று மாலை வகுப்பு முடிந்து வெளியே வந்த போது பைக்கில் வந்த மூன்று பேர் மாணவரை சராமரியாக தாக்கி பைக்கில் ஏற்றி சென்றனர். இதனை பார்த்த மக்கள் கூச்சலிடவே பின்னர் இறக்கி விட்டு சென்றனர். பள்ளியில் தன்னைப் பெரிய ஆளாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதால், சக மாணவர்கள் இவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News August 14, 2024

விராலிமலை அருகே 8 பேர் கைது

image

மலைக்குடிப்பட்டியில் 10க்கும் மேற்பட்டோர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய ராசு (51) கந்தசாமி (56) நல்லதம்பி (72) அண்ணாமலை (48) பச்சையப்பன் (63) தங்க பழனியாண்டி (72) வேலு (65) செல்வம் (56) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இருவர் தப்பியோடினர்.

News August 14, 2024

அரசு பள்ளியில் நடிகர் அர்ஜுன்

image

திருமயம் அருகே உள்ள ராராபுரம் கிராமத்தில் தம்பி ராமையாவின் சம்பந்தியுமான, நடிகர் அர்ஜுன் ராராபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு அவருக்கு மாணவ, மாணவிகள் கைத்தட்டி வரவேற்பளித்தனர். பின்னர் அரசு பள்ளிக்குள் சென்ற நடிகர் அர்ஜுன், மற்றும் தம்பி ராமையா, அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா மாணவர்களை சந்தித்தனர்.

News August 13, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தின் நாளைய நிகழ்வுகள்

image

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக நாளை காலை 10:30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், குப்பையம்பட்டி, வளையம்பட்டி, ஊமையர் ஆகிய கிராமங்களில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மகத் பூஞ்சோலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குப்பயாம்பட்டி கிராமத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்க உள்ளார்.

News August 13, 2024

புதுக்கோட்டையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

image

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் திடீரென பல கிளப் பார்கள் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். இந்த பார்களில் பலர் அதிகமாக குடித்துவிட்டு, குடும்பங்களை பார்க்காமல் இருக்கிறார்கள். இதனை கண்டித்து புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சரக்குக்கு பல்லாக்கு தாலிக்கு பாடையா என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 13, 2024

புதுக்கோட்டையில் ஓர் அதிசய கிராமம்

image

அன்னவாசல் அருகே உள்ளது மெய்வழிச்சாலை கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் ஒரு புதிய மதத்தை பின்பற்றி, வித்தியாசமான உடை அலங்காரத்துடனும் பழக்க வழக்கங்களுடனும் வாழ்ந்து வருகிறார்கள். ஆண்கள் அனைவரும், தங்களது பெயருக்கு முன்னால் சொந்த சாலை என்ற பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர். மின்சார வசதி இல்லாமல் சோலார் விளக்குகளை பயன்படுத்தி வாழ்கின்றனர். 69 சாதியை சேர்ந்த அனைவரும் சமம்.

News August 13, 2024

புதுக்கோட்டையில் வட்டார மேம்பாட்டு கூட்டம்

image

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக அரசின் வளமிக்க வட்டார மேம்பாட்டு திட்டம் சார்பில், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிலான திட்டக்குழு கூட்டம், ஆட்சியர் அருணா தலைமையில், மாநில திட்டக்குழு கூடுதல் முழு உறுப்பினர் முனைவர். எம். விஜயபாஸ்கர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 13, 2024

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது

image

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் என்னும் இடத்தில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று வாடிக்கையாளரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

News August 13, 2024

40 நிமிடம் பவர் கட் – பரிதவித்த நோயாளிகள்

image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 40 நிமிடங்களாக மின்சாரம் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், தீவிர சிகிச்சை பிரிவும் ஸ்தம்பித்தது. மருத்துவமனையே இருளில் மூழ்கியதால், நோயாளியுடன் வந்த உதவியாளர்களும் பெரும் அவதியடைந்தனர். இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 1 மணி நேரத்திற்கு பின் நிலமை சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News August 13, 2024

புதுக்கோட்டை பகுதிகளில் மின்தடை

image

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆக. 14) மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், பாரி நகா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், அம்மையாப்பட்டி, கடையக்குடி, லெணாவிலக்கு, பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!