Pudukkottai

News March 17, 2026

புதுக்கோட்டை: மெடிக்கல் செல்வோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 17, 2026

புதுகை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த கலெக்டர்

image

புதுகை மாவட்டத்தில் வெயில் கடுமையாக உள்ளதால் வேப்ப அலை தாக்கும் சூழ்நிலை உள்ளது. ஆகவே பொதுமக்கள், பருத்தி ஆடைகள், கூலிங் கிளாஸ், தொப்பி, ORS கரைசல், வெளியே செல்லும் பொழுது பாட்டில்களில் குடிநீர், ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் மதியம் 12 மணி முதல், 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் தேநீர் காப்பி மற்றும் கார்பனேட் பானங்களை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 17, 2026

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட புதுக்கோட்டை கலெக்டர்

image

புதுகை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலின் போது காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, படைப்பணி சான்றுடன், முன்னாள் படை வீரர் இயக்குனர் அலுவலகத்தை அனுகுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04322-236593 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2026

புதுக்கோட்டை மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

image

புதுக்கோட்டை மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News March 17, 2026

புதுக்கோட்டை: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 17, 2026

புதுகையில் வங்கியாளர் ஆலோசனைக் கூட்டம்

image

புதுகையில் நடந்த வங்கியாளர் ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் மு.அருணா பேசியதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.10 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடைபெற்றாலும், ஜிபே உள்ளிட்டவைகளில் சந்தேக பரிவர்த்தனை நடைபெற்றாலும், அதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். எடுத்துச் செல்லப்படும் பணம் குறித்த ஆவணங்களை வாகனங்கள் செல்லும்போதே வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

News March 17, 2026

புதுகை: BE/B.tech முடித்தால் வங்கி வேலை!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது பூர்த்தியடந்தவர்
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 17, 2026

புதுகை அரசியல் கட்சிகளுக்கு கலெக்டர் கெடு!

image

புதுகையில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் பொது வளாக கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், பாலங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சி விளம்பரங்களை 48 மணி நேரத்திற்குள்ளும், தனியார் வளாகம் கட்டிடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்துக்குள்ளும் அகற்ற வேண்டும் என கலெக்டர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 17, 2026

புதுகை ஆட்சியர் தீவிர அறிவுறுத்தல்!

image

புதுகையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மு.அருணா, “மாவட்டத்தின் நகரப் பகுதிக்குள் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், கொடிகளை 72 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் பணம் பரிசுப் பொருள்களை இஎஸ்எம்எஸ் என்ற செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.” என்றார். இதில் மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 17, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!