Pudukkottai

News October 12, 2024

100 ஆண்டாக கம்பீரமாக நிற்கும் மணிக்கூண்டு!

image

புதுகை கீழ ராஜ வீதி காந்தி பூங்காவில் உள்ள மணிக்கூண்டு 101 வருடங்களாக எந்தவித சேதம் இல்லாமல் கம்பீரமாக நிற்கிறது 22.12.1933 ஆம் ஆண்டு புதுக்கோட்டை திவானாக இருந்த “ஹோல்ஸ் வொர்த்” திறந்து வைத்தார். இந்த மணிகூண்டு-டை கட்டியவர் “முகமது ஹனிபா” என்ற காண்ட்ராக்டர், இந்தக் கட்டிடக்கலையை வடிவமைத்தவர் “சுவாமிநாத பிள்ளை” என்பவராகும். தினமும் 100 கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

News October 12, 2024

புதுகை அருகே 4 பேர் கைது

image

அரசமலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி டிப்பரில் மணல் கடத்திய மேமணப்பட்டியை சேர்ந்த பால்கண்ணு,  கவியரசு, கதிர்வேலு, கமலேஷ்,  ஆகிய 4  பேரை கைது செய்து டிப்பர்லாரி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

News October 12, 2024

வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர் அறிக்கை

image

புதுக்கோட்டையில் அனைத்து துறையினரின் ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மு.அருணா பேசியது, ‘வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக திருமண மண்டபம், சமுதாய கூடங்களை தயார்படுத்தி வைக்க வேண்டும். பொதுமக்கள் பாதிப்பு குறித்த தகவல்களை 04322 222207, 1077 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்’ என்றார்.

News October 11, 2024

மணமேல்குடியில் மல்லிகை கிலோ ரூ.600க்கு விற்பனை

image

மணமேல்குடியில் மல்லிகைப்பூ விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 300 விற்ற நிலையில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு கிலோவிற்கு ரூ.300 அதிகரித்து ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 600-க்கு விற்கப்படுகிறது.

News October 11, 2024

புதுகை கலெக்டர் அழைப்பு

image

ஜவகர்லால்நேரு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுகை மன்னர் கல்லூரியில் வரும் 15ஆம் தேதி காலை 10மணிக்கு பேச்சுப்போட்டி நடைபெறகிறது. பள்ளிகளுக்கான தலைப்பு ஆசியஜோதி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் கல்லூரி தலைப்பு நேருகண்ட இந்தியா, அமைதிப் புறா நேரு தலைப்பில் நடைபெறும் பேச்சுபோட்டியில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி கல்லூரியில் இருந்து ஒருவர் மட்டும் பங்கேற்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 10, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பணி

image

புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 52 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பங்கள் தகுந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து http://www.drbpdk.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்

News October 10, 2024

புதுக்கோட்டைக்கு இப்படியொரு பெயரா!

image

புதுக்கோட்டையில் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் கொண்ட குழுவினர் மச்சுவாடியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புதுகை சமஸ்தான நகர எல்லை கல்வெட்டை கண்டனர். புதுகை சமஸ்தானம், புதுகை தனி அரசு என்று என்று அழைத்தாலும் இதன் பழைய பெயர் கலசமங்கலம் அல்லது கலசக்காடு என புதிய தகவல் கிடைத்துள்ளது. ராஜா ராமச்சந்திரா (1839 -1886) ஆட்சி காலத்தில் புதுகை நகரமாக மாறியது.

News October 9, 2024

புதுகை மீனவர்கள் கைது: பெயர்கள் வெளியீடு

image

ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர். அதன்படி ரமேஷ், ஜானகிராமன், கிருஷ்ணன், குமார், ராஜ், ரவீந்தர், உலகப்பன், அருள்நாதன், வைத்தியநாதன், குமரேசன், மகேஷ், மதன், விஜய், விக்கி, மகேந்திரன், முனியவேல், சிவகுமார், சூர்யா, சூர்ய, பிரகாஷ், கருப்பசாமி கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ளனர். SHAREIT

News October 9, 2024

எல்லைத்தாண்டி வந்ததாக கூறி புதுகை மீனவர்கள் 21 பேர் கைது

image

புதுக்கோட்டை அடுத்த ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இலங்கை கடற்படையால் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 9, 2024

புதுகை மேயர் தலைமையில் முதல் மாமன்ற கூட்டம்

image

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் இன்று அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் பதவியேற்றார். இந்நிலையில், மேயர் திலகவதி செந்தில் தலைமையில் இன்று முதல் மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆட்சியர் அருணா, MLAக்கள் மாமன்ற உறுப்பின்னர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!