India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீரமங்கலம் கிராமம் காமராஜ் நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழல் கூறை கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.
கீரனூர் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய கல்லு கடை பகுதியில் சிலர் பண வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் கீரனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், சந்திரசேகர்,சரவணன், இளங்கோவன்,சின்னையா, பழனி, மேகநாதன், படையப்பா, சூர்யா, சக்திவேல், சிலம்பரசன், வெள்ளையன், செந்தில்குமார் பாரதி, செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
வெள்ளனூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சுற்றித் திரிவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற திருக்கோகர்ணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் புதுகையை சேர்ந்த லோகேஸ்வரன், முகமது அலி, செல்வம் என தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் ரூ.25,000 மதிப்புள்ள 21/2 கஞ்சா, இருசக்கர வாகனம் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுகை திமுக மாநகர செயலாளர் செந்தில் மறைவை முன்னிட்டு நாளை (24.12.24) இறுதி சடங்கு நடைபெற உள்ளதால் அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுகையில் உள்ள அனைத்து உணவகங்களும் நாளை ஒருநாள் மூடப்படும் என சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் நாளை காலை 7 மணிக்கு அனைத்து வர்த்தகர்களும் ஊர்வலமாக சென்று செந்தில் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் ரூ.100 முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் ஈட்டலாம் என போலியான ஸ்டாக் விளம்பரத்தை நம்பி புதுகையை சேர்ந்த 2 பேர் ரூ.4 கோடி வரை இழந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குணசீலன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.
புதுக்கையை சேர்ந்த மாணவர்கள் நாகமணி நரேன், தினேஷ், எபினேஷ், திருச்செல்வம் மணிகண்டன் ஆகிய ஆறு பேரும் அகில இந்திய பல்கலைக்கழக இடையான போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் 26 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிற குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற குத்துச்சண்டை பயிற்றுனர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நால்வர் உலாவில் சிறுவர் சிறுமியர் 63 நாயன்மார்கள் வேடமணிந்து பங்கேற்றனர். சேக்கிழார், திருஞானசம்பந்தர் அப்பூதியடிகள்,,கண்ணப்பர் இசைஞானியார்,என 63 நாயன்மார்கள் வேடமணிந்து சிவாயநமஹ முழக்கத்துடன் பங்கேற்றனர். இக்காட்சி காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
வடக்கு தொகுப்பு பட்டி கிராமத்தில் கவிதா 27 நிறைமாத கர்ப்பிணிக்கு இன்று காலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வலி அதிகமானதாக ஆம்புலன்ஸை ஓரமாக நிறுத்தி, அவசரகால மருத்துவ நுட்புனர் ரெங்கராஜ் பிரசவம் பார்த்தார் 04: 35 மணி அளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
அண்ணாபண்ணை, அன்னவாசல், கறம்பக்குடி, திருமயம், விராச்சிலை, ராயவரம், புதுக்கோட்டை சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (டிச.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆதனக்கோட்டை அருகே சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகன்கள் உள்ளன. இந்நிலையில் சரவணன் பெருங்களூர் பகுதியில் உள்ள தைலம் மரக்காட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.