Pudukkottai

News October 31, 2024

உடன்கட்டை ஏறிய புதுக்கோட்டை ராணி

image

புதுகை சமஸ்தானம் 1789-1807 விஜய ரகுநாத தொண்டைமான் இறந்ததும் அரசி பிரகன்னநாயகி ஆயி அம்மாள் உடன்கட்டை ஏற முன்வந்தார் 10,9 ஆண் பிள்ளைகளை ஆட்சியாளர் ஜான் பிளாக் பர்ன் ஒப்படைத்துவிட்டு சிதையில் இறங்கி உயிர் நீத்தார். அந்த இடம்தான் மாலையிடு எனப்படுகிறது அவரது நினைவாக திருமயம் சாலையில் மாலையிட்டில் கோவில் ஈடுபாடுகள் இன்றும் காணப்படுகிறது. Way2news “காலச்சுவடு” தொடரும்… 

News October 31, 2024

புதுக்கோட்டைக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 31, 2024

புதுக்கோட்டை மாவட்ட இரவு ரோந்து பணி விவரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (30.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

News October 30, 2024

ஆலங்குடியில் 2 வது மாடியில் தீ விபத்து

image

ஆலங்குடி காமராஜர் சிலை அருகே உள்ள வீட்டில் மாடியில் 2 வது தளத்தில் போடப்பட்டிருந்த கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

News October 30, 2024

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஆண் சடலம்

image

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த புதுக்கோட்டை காவல்துறையினர் இறந்தது யார் என்ற தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை நாட்களில் மக்கள் கூடும் இடத்தில் இது போன்ற சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

News October 30, 2024

ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

image

இலுப்பூர் சின்ன கடைவீதியில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் ஹால்மார்க் முத்திரையிடாத நகைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த இந்திய தர நிர்ணய அமைப்பு அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். மத்திய அரசின் ஹால்மார்க் எண் முத்திரை இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1643 கிராம் நகையை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு கோடி ஆகும்.

News October 28, 2024

தமிழக ஆளுநருக்கு 270 காவல்துறையினர் பாதுகாப்பு

image

திருச்சி விமான நிலையத்திலிருந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் வழியாக 71 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் தமிழக ஆளுநர் ரவிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 270 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர் என எஸ்பி அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

News October 28, 2024

புதிய சாலை பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்

image

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் நாளை 28.10.2024 திங்கட்கிழமையன்று
காலை 12:00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் – நெடுவாசல் கிழக்கு ஊராட்சியில் புதிய சாலை பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கவுள்ளார்கள்.இந்த நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்

News October 27, 2024

புதுகை: கண்காணிப்பு கோபுரம் நாளை திறப்பு 

image

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை கீழ ராஜவீதி மற்றும் வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே திறந்து வைக்க உள்ளார்.

News October 27, 2024

ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

error: Content is protected !!