India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் வட்டம் மற்றும் சரகம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 13ம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 05.11.2024 அன்று முதல் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் புண்ணியவயல் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெறவுள்ளதால் பொதுமக்கள் மனுக்களை வழங்குமாறு ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.
விராலிமலையை அடுத்துள்ள கசவனூர் வடக்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(59). கட்டடத் தொழிலாளி. இவர் நேற்று மாலை கொடும்பாளூர் கசவனூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விராலிமலை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலுப்பூர், புங்கினிப்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (39) இவர் இலுப்பூரில் உள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு நடந்து சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த குமரேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இதுகுறித்து போலீசார் நத்தம்பண்ணையை சேர்ந்த புகழேந்தி என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பாத்திமாநகரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு இன்று கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாத்திமாநகரில் ஒரு பெட்டிகடையில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட பூதக்குடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து என்பவரின் மகன் பாக்கியராஜ் (29). இவருக்கும்
இவரது தந்தைக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாக்கியராஜ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் சிங்காரவேலு கொடுத்த புகாரின் பேரில் உடையாளிப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராசு விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மார்க் வருமானம் 70% உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 7.9 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது கிட்டத்தட்ட ரூ.13 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்துள்ளது. இது எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானம் 70% கிடைத்துள்ளதாக டாஸ்மார்க் நிர்வாகத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (01.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுகை அடுத்த கைக்குறிச்சி பாப்பா வயலில் மாயக்கண்ணன் என்பவரது வீட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் கம்பி மத்தாப்பு பற்ற வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்குள் இருந்த துணிகளில் பட்டு தீ மல மல பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உயிர் தப்பினர். வீட்டுக்குள் இருந்த ஐம்பதாயிரம் பணம் மற்றும் முக்கியம் ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆகின.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (31.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு 2024-ம் ஆண்டிற்கான ‘மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடய அறிவியலில் சிறந்து விளங்கியோருக்கு கேந்திரிய க்ரிக்மந்த்ரி தக்ஷதா பதக் 2024 விருதுகளை மத்திய உள்துறை அறிவித்துள்ளது. கேந்திரிய க்ரிமினல் மந்திரி தக்ஷதா பதக் விருதை புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே பெற்றார்.
Sorry, no posts matched your criteria.