India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுகை எஸ்.பி அபிஷேக்குமார் பரிந்துரையின் பேரில் டிஜிபி சங்கர் ஜிவால் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருமயம் அருகே கனிமவள கொள்கைக்கு எதிராக போராடியவர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து புதுகைக்கு நேற்று சரக்கு ரயில் மூலம் 42 வேகன்களில் 2,646 டன் அரிசி மூட்டைகள் வந்தன. ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயில்களிலிருந்து சுமை துக்கும் தொழிலாளிகள் இறக்கி பின்னர் லாரியில் ஏற்றினர். இந்த அரிசிகள் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.22) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அரவம்பட்டி, மங்கனூர், வடுகபட்டி, பெருங்கலூர், வீரடிப்பட்டி, கள்ளாக்கோட்டை, மட்டங்கால், வராப்பூர், கந்தர்வக்கோட்டை மற்றும்
அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
புதுகை தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கள ஆய்வு நாளை 22ஆம் தேதி ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெறுகிறது. குறுவட்டம் தோறும் காலை 9 மணி முதல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் முகாமும், மதியம் 2:30 மணிக்கு தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் மனு அளித்து பயன் பெறலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன.24ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.1.25 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வில் பங்கேற்கும் விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பி அதற்கான பதில் கிடைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
திருமயம் அருகே சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடிய நபர் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, போலீசார் விசாரணையில் அம்பலமானதால் கல்குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது, ஒருவர் தலைமறைவு, கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் திருமயம் காவல்துறையினர் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாநகரில் புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், தெற்கு 4-ம் வீதி, ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், ராஜ வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share Now..
புதுக்கோட்டை மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையத்தில் (டிஇஐசி) பணிபுரிய தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தார். இதுகுறித்து அவா் கூறியது, புதுக்கோட்டை மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையத்தில் (டிஇஐசி) குழந்தைகள் நலன்சாா்ந்த இந்த மையத்தில் பணியாற்ற 3 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. விண்ணப்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் <
அன்னவாசல் கோவில்காடு பகுதியை சாந்தூரப்பன் இவரது மகள் சிவசுடர் (20) நேற்று முன்தினம் (ஜன.16) அன்னவாசலில் டைப்பிஸ்ட் பயிற்சிக்கு சென்ற நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரும்படி இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.