Pudukkottai

News November 10, 2024

காசி அயோத்தி ரயில்கள் புதுகையில் நிற்க கோரிக்கை

image

ராமேஸ்வரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக சென்னை வட மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம்-பனாரஸ், ராமேஸ்வரம்-அயோத்தி, அயோத்தி-ராமேஸ்வரம் ரயில்கள், காசி, அயோத்தி செல்ல வசதியாக புதுக்கோட்டை வழியாக ரயில்கள் நின்று செல்ல அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News November 10, 2024

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

image

பொன்னமராவதியைச் சேர்ந்த சற்குணம்(32) என்பவருக்கும், காரைக்குடி புதுவயலைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் சுந்தரசோழபுரத்தில் தனது பாட்டி வீட்டில் இருந்த பிரியங்கா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News November 10, 2024

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 9, 2024

மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

image

பியூசின்னப்பா நகர், கே எல் கே எஸ் நகர், புதுக்கோட்டை நகரில் இன்று இரவு மின்பழுது ஏற்பட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணை 94987 94987 மாவட்டம் மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி இரவு நேர புகார்களுக்கு என்ற தொலைபேசி எண்ணின் மூலம் பொதுமக்கள் மின்பழுது சம்பந்தமான புகாரை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் மின்பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர்

News November 8, 2024

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் நாளை (நவ.9) காலை 10 மணி முதல் 1 மணி வரை குடும்ப அட்டைகள் ரேஷன் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

புதுகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திருமயம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான பெருமாள் கோவில் சிவன் கோவில் இரு திருக்கோவிலிலும் நாளை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி சிவன் கோவில், பெருமாள் கோவில் சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்களை பக்தர்களுக்கு இடையூறின்றி நிறுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 7, 2024

புதுகையில் ‘போலிஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், பிரச்சனைகளுக்கான உதவியைக்கோரும் வகையிலும் ‘போலிஸ் அக்கா’ திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 30 பெண் போலிஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

News November 7, 2024

இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி முகாம் 

image

படித்த வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான இளைஞர் திறன் திருவிழாவானது புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊடக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக வரும் 9ஆம் தேதி அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் 16ஆம் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது. படித்த வேலையற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

கறம்பக்குடியில் திருமணமான இளம்பெண் மாயம்!

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்மானிப்பட்டைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் நேற்று(நவ.5) திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போனார். இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ஒரு மகன் உள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கறம்பக்குடி போலிஸார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2024

கொப்பனாபட்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

பொன்னமராவதி தாலுகா கொப்பனாபட்டி காட்டுப்பட்டி விளக்கில் முதியவரின் ஆண் சடலம் கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு இறந்தவர் யார்? எந்த ஊர்? கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!