Pudukkottai

News November 29, 2024

புதுக்கோட்டையில் ஓய்வூதியர்கள் குறை கேட்புக்கூட்டம்

image

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டிச.6 ஆம் தேதி  ஓய்வூதியர்கள் குறை கேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்பும் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் குறைகளை முழுமையான விவரங்களுடன் இரட்டைப் பிரதிகள் எழுதி டிச.2க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.29) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்

News November 28, 2024

ஆட்டன்குடி தண்டலையில் சிவன் கோவில் கண்டுபிடிப்பு!

image

அறந்தாங்கி அரசு கலை அறிவியல் தமிழ் துறை தலைவர் காளிதாஸ் தலைமையில் கொண்ட குழுவினர் ஆட்டாங்குடி தண்டனை கண்மாயில் சோழர்கால சிவன் கோயில் ஒன்றை கண்டுபிடித்தனர் மண்ணில் புதைந்த நிலையில் சிவலிங்கம் காணப்பட்டது “ஸ் வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு 45 வது மரமடக்கி சதுர் வேதி மங்கலத்து” கி.பி.1115 ஆண்டில் கோவில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் அதில் நந்தியம் பெருமாள் இருப்பதும் தெரியவந்தது.

News November 28, 2024

பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்பொழுது உடன் பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர்,பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

News November 28, 2024

சிறுவனுக்கு ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை

image

கரூர் மக்களவை தொகுதிக்கு இலுப்பூர் தாலுகா பரம்பூர் தெற்கு, அய்யனார்புரத்தை சேர்ந்த தர்ஷன்  (12) என்ற சிறுவன், நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிகழ்வு மிகுந்த மன வேதனையும், துயரமும் அளிக்கிறது. எனவே தர்ஷனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10  லட்சம் வழங்குமாறு கரூர் எம்பி ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 28, 2024

44 காவலர்களுக்கு பணி நியமன ஆணை

image

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, புதுகையில் நியமனம் பெற்றுள்ள 44 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். அப்போது அவர் ‘பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்தார்.

News November 27, 2024

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

image

பேராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் இன்று வீட்டு மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது பட்டம் வீட்டின் முன் சென்ற மின்சார கம்பியில் விழுந்தது. அதனை எடுப்பதற்கு முயலும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடல் கூறாய்வுக்காக சிறுவனின் உடல் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 27, 2024

புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க

News November 26, 2024

கலெக்டரை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

image

நாளை மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாளை காலை 9 மணி அளவில் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அறந்தாங்கி அதிமுக நகர செயலாளர் ஆதிமோகன் தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

துணை காவல் துறை கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுகள்

image

கீழநிலை அருகில் உள்ள கே.ராயபுரம் ஊராட்சியை சேர்ந்த மணி, வள்ளி தம்பதியரின் மகன் மகேஷ்குமார் திருசெந்தூரில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக நேற்று பணி ஏற்றுள்ளார். இவர் பணியில் சீரும் சிறப்புமாக பணியாற்றி பல்வேறு உயர் நிலை பொறுப்புகளை அடைய கே ராயபுரம் பகுதி மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்செய்தியை சமூகவலை தளங்களில் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!