India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி, குன்றண்டார் கோவில் ஒன்றியம் கீழையூர் ஊராட்சி குளவாய்ப்பட்டியில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று (செப்.6) கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக புதுகை வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. அதிகாரப்பூர்வ <

புதுகை மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” 2.8.2025 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு முகாமிற்கு 1400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் என மொத்தம் 5,738 மருத்துவ பயனாளிகள் பயனடைந்துள்ளனர். முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அவசரக்கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 04322-222207 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

பொன்னமராவதியில், தமிழக அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தபோது, வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் காத்திருப்பதற்குப் போதிய இடவசதி இல்லாததால் சிரமப்படுவதைக் கண்டார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து, பொதுமக்கள் அமர்வதற்குப் பந்தல் அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, உடனடியாகப் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <

புதுகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04322-224999 அணுகலாம். SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அவசர அல்லது தேவையான நேரங்களில் பொதுமக்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.