Pudukkottai

News December 7, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க அவகாசம் நீட்டிப்பு

image

பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில், முதல் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி புதுக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் இணையதள முகவரியில் வரும் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

தமிழ் புலவன், புதுமைப்பெண் திட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக சமூக நலன் மற்றும் உரிமை துறை சார்பில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். இதில் தமிழ் புதல்வன் முதன்மைப் பெண் திட்டத்தில் புதுக்கோட்டையில் 17,392  மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 7, 2024

புதுகையில் திருநங்கைகளுக்கான குறை தீர்ப்புக் கூட்டம்!

image

புதுகையில் நேற்று திருநங்கைகளுக்கான மாதாந்திர சிறப்பு குறை தீர்ப்புக் கூட்டம் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இதில் வீட்டுமனைப்பட்டா, சிறு தொழில் கடன் உள்ளிட்டவை குறித்து இதில் பங்கேற்ற 60 திருநங்கைகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதிகாரிகளிடம் கலந்து பேசி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். இதில் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 6, 2024

வேங்கைவயல் மக்களை கௌரவித்த விஜய்

image

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தை அச்சப்படாமல் வெளியே கொண்டு வந்த பெண்கள் உட்பட 4 பேருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொன்னாடை போற்றி, அம்பேத்கர் நூலை வழங்கி கௌரவித்தார். இதுகுறித்து கருத்துக்களை கமெண்ட் செய்யவும்

News December 6, 2024

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது வழக்கு

image

இலுப்பூர் அருகே கோத்திராப்பட்டியை சேர்ந்தவர் கோபால் (22). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், சிறுமியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி இலுப்பூர் மகளீர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News December 5, 2024

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (05.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News December 5, 2024

புதுகை: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

image

புதுகை சோலார் தெருவிளக்கு அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறந்தாங்கி அரிமளம் கரம்பக்குடி திருமயம் திருவரங்குளம் மணமேல்குடி குன்றாண்டார் கோவில் கந்தர்வகோட்டை பகுதிகளில் வேலை பார்க்கும் BDO கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மற்ற துறை அரசு அலுவலகங்கள் பீதியில் உள்ளனர்.

News December 4, 2024

எஸ்.பி. தலைமையிலான குற்ற ஆய்வுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மொத்தம் 38 நபர்களை (04.12.2024) இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டினார்.

News December 4, 2024

புதுக்கோட்டை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டையில் மின்சார வாரிய இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை, இலுப்பூர், கந்தர்வகோட்டை பகுதிகளுக்கான மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து மின்வாரிய சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என மின்சார வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

சிறுவனை கடித்த தெருநாய்

image

கரம்பக்குடி சுக்கூர் மகன் 4 1/2 வயது சிறுவன் தனியார் மெட்ரிக் பள்ளியில் LKG படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தெரு நாய் ஒன்று இவரை கன்னம், தோள்பட்டையில் கடித்துக் குதறியது. அலரல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாயை அடித்து விரட்டி விட்டு உடனடியாக சிறுவனை கரம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!