Pudukkottai

News March 5, 2025

புதுகை: கைவினைப் பொருட்களை பார்வையிட்ட ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி, எம்.ஜி.ஆர். நகரில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில், தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் பத்மாவதி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்படும், தஞ்சாவூர் ஓவியங்கள்/ கைவினைப் பொருட்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., இன்று (05.03.2025) நேரில் பார்வையிட்டார்.

News March 5, 2025

புதுகை: 10ம் தேதி உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் பத்தாம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை எனவும் அதற்கு பதிலாக சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என தெரிவித்தார்.

News March 5, 2025

புதுகை: நீதிமன்றத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு

image

அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லா (58). இவர் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டில் இவர் மீது உள்ள வணிக பொருளாதார குற்ற வழக்கில் ஆஜராகி விட்டு நீதிமன்ற படிக்கட்டுகளில் இறங்கி சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை.

News March 5, 2025

அன்னவாசல்: முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு

image

அன்னவாசல் பள்ளிவாசல் எதிரில் புதிதாக திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு இருக்கக் கூடிய மருந்துகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். அப்போது செய்தி மகள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராமசுந்தரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News March 4, 2025

பூவரசகுடி பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

திருவரங்குளம் பூவரசகுடி ஊராட்சிநடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் சென்று கற்றல் கற்பித்தல் திறன் குறித்து பயின்று வரும் மாணாக்களிடம் கேட்டறிந்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

News March 4, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

புதுகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 8ஆம் தேதி மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இமுகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் 8ஆம் வகுப்பு முதல் பட்டைய படிப்பு வரை படித்துள்ளவர்கள் பங்கு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

பெருங்கலூர் யூகலிப்டஸ் காட்டிற்குள் வாலிபர் தூக்கு மாட்டி இறப்பு

image

புதுகை, ஆலங்குடி வட்டம் மாங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுகை பெருங்களூர் யூகலிப்டஸ் மரக்காட்டிற்குள் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததின் அடிப்படையில் ஆலங்குடி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெயர், இறப்பிற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். புதுக்கோட்டையில் மட்டும் 32 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <> <கிளிக்><<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

News March 3, 2025

இடையாத்தூர்: ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்தவர் உயிரிழப்பு

image

பொன்னமராவதி, இடையாத்தூரில் கடந்த 28ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில் பார்வையாளராக சென்ற இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (45) என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 2, 2025

புதுக்கோட்டை : தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு!

image

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த.நாராயணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!