Pudukkottai

News January 11, 2026

புதுக்கோட்டை: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த நார்த்தாலையை சேர்ந்தவர் நாகேஷ் (55). இவர் நேற்று நார்த்தாமலை சமத்துவபுரம் சாலையில் நடந்து சென்ற போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுகுமார் அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

புதுகை: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு<> E-பெட்டகம் <<>>என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

புதுகை: நான்கு மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்

image

மணமேல்குடி அருகே பொன்நகரம் கடற்கரை கிராமத்தில் இருந்து திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் நேற்று (ஜன.10) திருமூர்த்தி, மணிகண்டன் விநாயகம், மணிகண்டன் என நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இதுவரை கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

News January 11, 2026

புதுகை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

புதுக்கோட்டை: விபத்தில் முதியவர் படுகாயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அடுத்த பெருங்கலூர் சாலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணன் (69) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே காரை ஒட்டி வந்த ராஜேஷ் (37) மோதியதில் அவர் படுகாயம் அடைந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி ராணி (52) அளித்த புகாரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

News January 11, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

News January 11, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

News January 11, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News January 10, 2026

புதுக்கோட்டை: காசி யாத்திரை புண்ணியம் வேண்டுமா?

image

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சாந்தநாதரை தரிசித்தால் முன்வினை பாவம், திருமணத்தடை, கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!