India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 22,835 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தமிழ் பாடத் தேர்வுடன் தொடங்கி வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கண்காணிப்பு அலுவலராக மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் கோபிதாஸ் அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இன்று நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் படை சூழ கலந்து கொண்டனர். திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை களத்தூரை சேர்ந்த பாலமுருகன் புதுக்கோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் குடும்பத்துடன் கார்களில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள்
சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தனர். அப்போது 2 கார்களின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த செல்போன்கள், மடிக்கணினி, ரூ.700 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங். சார்பில் போட்டியிட கார்த்திக் சிதம்பரம் தனது வேட்புமனுவை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆஷா அஜித்திடம் வழங்கினார். அருகில் அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் உள்ளனர்.
அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள கடையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள பட்டாசுக்கடையில் பிடித்த தீ அருகில் உள்ள நகைக்கடை, பாத்திரக்கடையில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் மிகவும் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் பால்குடம் காவடி எடுத்து வழிப்பட்டனர் பெண்கள் அலகுகுத்தி தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டையில் அஇஅதிமுக-SDPI கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ஸலாஹுத்தீன் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்வில் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை உள்ளிட்ட குழுவினா், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றும்போது, உடனுக்குடன் பிரத்யேக செயலியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா.மொ்சி ரம்யா நேற்று அறிவுறுத்தினாா். புதுகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
புதுக்கோட்டை ismart பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் புதுகை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா.
இந்நிகழ்வின்போது புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மாநகராட்சி உறுப்பினர் காந்திமதி , வட்டக் கழக செயலாளர் பிரேம் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகளும், பள்ளியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.