Pudukkottai

News April 1, 2024

புதுக்கோட்டையில் 11 பேர் கைது

image

புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மச்சுவாடி பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து கும்பலாக சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரத்து 500 சீட்டுக்கட்டுகள் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது

News April 1, 2024

புதுக்கோட்டையில் காவல்துறை அணிவகுப்பு!

image

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பை நகரக்காவல் துணைக்கண்காணிப்பாளர் ராகவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மேலராஜவீதி வழியாக வந்த இந்த அணிவகுப்பு ஊர்வலம் நகர்மன்றத்தில் நிறைவடைந்தது. இதில் நகரக்காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் இதில் பங்கேற்றனர். இதே போல அறந்தாங்கியிலும் நேற்று காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.

News March 31, 2024

புதுகை: வியாபாரிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது! 

image

புதுகை அருகே சிதம்பரவிடுதி சேர்ந்தவர் கண்ணன் காய்கறி வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, மர்ம நபர்கள் இருவர் முன் விரோதத்தில் வேறு ஒருவரை கத்தியால் குத்துவதற்கு பதிலாக அவ்வழியாக இருட்டில் வந்த கண்ணனை கத்தியால் குத்தியதில் அவர், படுகாயம் அடைந்தார். இதனையடுத்து போலீசார் கத்தியால் குத்திய ரமணன், மற்றும் ராஜீவ் ஆகிய இருவரையம் நேற்று போலீசார் கைது செய்தனர்.

News March 31, 2024

புதுகை: ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

image

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ 4ம் வீதி தென்புறம் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை விழாவை முன்னிட்டு இன்று (மார்ச்.31) நடைபெற்ற அன்னதான நிகழ்வினை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாக்கத் அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

News March 31, 2024

புதுக்கோட்டை: ஓபிஎஸ் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு

image

ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓபிஎஸ் மீது அறந்தாங்கி காவல்நிலையத்தில் 3 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெண்கள் ஆரத்தி எடுத்துபோது ஓபிஎஸ் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்ளிட்ட காரணங்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News March 30, 2024

புதுகை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

image

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று தொடங்கி வைத்தார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News March 30, 2024

புதுகையில் ஓபிஎஸ் பணம் விவகாரம்

image

புதுகை மக்களவையின் கீழ் வரும் அறந்தாங்கி பகுதியில் இன்று ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்ணுக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் கண்காணிப்பு அலுவலர் அருண் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதேபோல், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த நேரத்திற்கு முன்பாக கூட்டம் நடத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

News March 30, 2024

பறக்கும்படையினர் பணிகளை கலெக்டர் ஆய்வு!

image

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திருமயம் வட்டம் லேனா விளக்கு அருகில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை குழுவினர்களின் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேற்று நேரில் பார்வையிட்டார்.

News March 29, 2024

புதுகையில் அமைச்சர் ரகுபதி உரை

image

மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நமக்கு சர்வாதிகாரம் தேவையில்லை என்றும் ஜனநாயகம்தான் தேவை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

News March 29, 2024

புதுகை அருகே தேர்தல் புறக்கணிப்பு 

image

காட்டுப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தராததால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என இன்று நோட்டீஸ் வெளியிடபட்டுள்ளது.

error: Content is protected !!