India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலினால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.மக்களவைத் தேர்தல் முடிவுற்றதால் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 30 ஆம் தேதியும், பொன்னமராவதி வட்டம் முள்ளிப்பட்டியில் மே 10 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசானையை அரசு கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் செயலர் மங்கத்ராம் சர்மா நேற்று வெளியிட்டுள்ளார்.
ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்தவா் எம்.ஜெயக்குமாா். இவா் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வாடகை வீட்டில் தங்கி மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கறம்பக்குடியில் உள்ள வாடகை வீட்டில் இருந்தபோது நேற்று திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதிய விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் வீரணம்பட்டியில் சேர்ந்த விவேக் குமார் (32). என்பவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய ரகுநாத சேதுபதி என்பவர் 1687ஆம் ஆண்டு திருமயம் கோட்டையை புதுக்கோட்டையில் நிறுவினார். 40 ஏக்கர் பரப்பளவில் இக்கோட்டை அமைந்துள்ளது. தற்போது இருக்கும் அளவை விட இக்கோட்டை இரு மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்று வரலாறு கூறுகிறது. கோட்டையிலிருந்து நுழைவு வாயில் ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. கோட்டையில் அடிவாரத்தில் சிவன், விஷ்ணு ஆலயங்கள் மற்றும் குலம், மண்டபங்கள் உள்ளன.
புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கினங்க கோடையில் மக்களின் தாகத்தை தீர்க்க அறுசுவை நிரம்பிய பழங்களுடன் கூடிய நீர், மோர் பந்தலை இன்று முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டையின் தீா்க்கப்படாத நீண்டகாலப் பிரச்னையாகக் கருதப்படும் தைலமரங்களை அகற்ற கோரும் பிரச்னையில், அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு விவசாயிகள் முடிவு செய்துள்ளனா். இவற்றில் கணிசமான பகுதி புதுக்கோட்டையைச் சோ்ந்தது . 1974-இல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் காப்புக்காடுகள் 99 ஆண்டுகள் ஒப்பந்தமாக வனத்தோட்டக் கழகத்துக்கு வழங்கப்பட்டன.
பொன்னமராவதி அருகே கண்மாய்கரையில் இன்று பொதுமக்கள் சென்ற பொழுது அங்கு உடல் முழுவதும் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கத்தியுடன் இளைஞர் ஒருவர் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலில் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அஞ்புளிபட்டியை சேர்ந்த ராமன் மகன் அடைக்கப்பன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
புதுக்கோட்டை நகரில் 1.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்ளிட்ட இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். வல்லத்திராக்கோட்டை அருகே கத்தக்குறிச்சி சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் ஜெய ரவிவர்மா விஏஓவாக இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்.
புதுக்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
புதுக்கோட்டை பாரதி நகரை சேர்ந்தவர் சுபா. இவர் நேற்று வீட்டில் மோட்டாருக்கான சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுபா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனையப்பட்டி கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல் விளக்க பயிற்சி நேற்று நடத்தினர். இந்த செயல் விளக்கத்தில் பனையப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பழனியப்பன் தங்களின் அனுபவத்தை மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த கல்லூரி மாணவிகள் வேளாண் திட்டங்கள் பற்றி கூறினர்.
Sorry, no posts matched your criteria.