India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16, 17ஆம் தேதிகளில் புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக பிப்ரவரி 1 மற்றும் 8 ஆம் தேதி வேலை நாட்கள் என புதுச்சேரி அரசு இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே 14, 15 ஆகிய நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2 நாட்கள் மற்றும் சனி,ஞாயிறு சேர்த்து மொத்தமாக ஆறு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் தொகுப்பிற்கான பணம் ரூ.750 இன்று (10-1-25) முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் ஆதி திராவிடர்களுக்கு வேட்டி சேலைக்கான பணம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் வழங்கினார். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் 47,442 பெண்கள் பயன்பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
புதுவை பல்கலைக்கழகத்தில் 2025–26 ம் கல்வியாண்டு முதுநிலை பட்டம், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் (பி.ஜி) நுழைவு தேர்வுக்கு https://exams.nta.ac.in/CUET–PG/ என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://www.pondiuni.edu.in/admissions-2025—-26/ என்னும் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் டவுண்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்துடன் கடந்த ஆண்டு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது விதிமுறை அதன்படி அடுத்த மாதம் 14ஆம் தேதிக்குள் சட்டசபை கூட்டம் பட வேண்டும் இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் இன்று கூடுகிறது கூட்டத்தில் சட்டசபையை கூட்டுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால் நடை அறுவை நிலையங்கள் மற்றும் ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மூடியிருக்க வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் 10 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் மற்றும் படகை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய மத்திய வெளியுவுத்துறை அமைச்சருக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்.எம்.பி.வி., நோய் பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இது நீண்டகாலமாகவே உள்ளது புதுச்சேரியில் பாதிப்பு இல்லை. சுவாச நோய் தொடர்பாக நோயாளிகள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரியில் தற்போது ஆய்வக பரிசோதனை வசதி மற்றும் சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அவர் இன்று புதுச்சேரி கீர்த்தி மகாலில்விளக்கம் அளித்தார். தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி மொழி’ நீங்கள் எழுதியது, பேசியது எந்த மொழியில்? இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்று பேசியிருக்கிறார் பெரியார்.திராவிடத்தை ஒழிப்பதும், பெரியாரை எதிர்ப்பதும் தான் எனது என்றார்
Sorry, no posts matched your criteria.