India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை மீனவர்களுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மீனவா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
வள்ளலார் ஜோதி தினமான வரும் 11ம் தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வள்ளலார் ஜோதி தினமான வரும் 11ம் தேதி, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அனைத்து ஆடு, மாடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் மூட வேண்டும். மீறி கடை திறந்திருந்தால், அபராதம் விதிப்பதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காரைக்கால் மீனவர்கள் கைது சம்பவம், பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து சட்டமன்றம் அருகே முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முன்னாள் முதல்வர் உள்ளிட்ட காங் கட்சியினரை கைது செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முழுமையாக வஞ்சிக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி பாராட்டி பேசுகிறார், நாற்காலி மட்டுமே முக்கியம், நாற்காலிக்காக கட்சியை கூட கலைப்பார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
புதுச்சேரி ஆதி திராவிட மற்றும் பழங்குடி இனத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற (பிப்.14) ஆம் தேதி தொடங்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தீயணைப்பு துறையில், தீயணைப்பாளர் மற்றும் டிரைவர் நிலை-3 பணியிடத்திற்கான எழுத்து தேர்வு, நாளை (பிப்.9) ஆம் தேதி 5 மையங்களில் நடக்க உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடக்கும் இந்த தேர்வை 2093 பேர் எழுத உள்ளனர். விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார்ஜா தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், புதுச்சேரி ஆளுநர் அவர்களின் செயலாளராக மாற்றப்பட்டதை முன்னிட்டு இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக சோம சேகர் அப்பாராவ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு நாளை 08.02.2025 (சனிக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி கடன் செயலி மூலமாக, பொது மக்களுக்கு கடன் கொடுத்து, கடன் மற்றும் வட்டித் தொகையை விட பல மடங்கு பணம் கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி ரூ.465 கோடி மேல் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, கேரளா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் என்பவரை நேற்று கைது செய்தனர்.
வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு வரும் (பிப்.11) ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராய மற்றும் பார் உள்ளிட்ட, அனைத்து மது கடைகளும் மூடி இருக்க வேண்டும் என கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தடையை மீறி மது விற்பனை செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். SHARE NOW !
Sorry, no posts matched your criteria.