India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. அதன்படி, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக புதுச்சேரியில் 21, காரைக்காலில் 10, மாஹே 3, ஏனாமில் 2 என மொத்தம் 35 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 13 உதவி ஆய்வாளா்கள் நேற்று திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய அருள், உருளையன் பேட்டைக்கும், திருநள்ளாரில் பணியாற்றிய லெனின் ராஜீ மாகேவிற்கும், காரைக்கால் டவுனில் பணியாற்றிய வேல்முருகன் மாகி பண்டக்கலுக்கும், மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை புதுவை தலைமைக் காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ் உத்தரவிட்டுள்ளாா்.
ஆரோவில்லை சேர்ந்த சரண்ராஜ் குயிலப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில், குணா ஆகிய மூன்று பேரும் கொத்தனார் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு பத்துகண்ணு என்ற இடத்தில் கடப்பேரி குப்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். வில்லியனூர் துத்திப்பட்டு அருகே சென்றபோது, சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதி, மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுச்சேரி திமுக சார்பில் இன்று செமஸ்டர் வினாத்தாளை மாற்றி மாணவர்களை குழப்பிய புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சதிகாரப் போக்கையும் மத்திய பாஜக அரசின் ஓரவஞ்சன செயல்பாடுகளையும், தேசிய கல்விக் கொள்கையின் குளறுபடிகளையும் கண்டித்து இன்று காலாப்பட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுவை தீயணைப்பாளர் & தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை -3 பணியிடத்திற்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தீயணைப்பாளர் (ஆண்கள்) பொதுப் பிரிவில் ஹரிகரன் 82.25 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மோகன்ராஜ் 70.26 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றனர். பெண்கள் பொது பிரிவில் அனந்தமொழி 69.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று புதன்கிழமை (பிப். 12) கூடும் என பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார். இதில் மாநிலத்தின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் முன் அனுமதி பெறுதல், சபை முன் வைக்கப்படும் ஆவணங்கள் இருப்பின் அவை வைக்கப்படுவதுடன், தணிக்கை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்ய உள்ளது.
புதுவை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:- புதுச்சேரி போக்குவரத்துத் துறையில் பிஒய்-05 யூ (உழவர்கரை) வரிசையில் உள்ள எண்களை இணையதளத்தின் மூலம் பிப்.18- ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் ஏலம் விடப்படவுள்ளது. ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயர் மற்றும் கடவுச்சொல்லை போக்குவரத்து இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மரப்பாலம் துணை மின் நிலைய உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (பிப்.12) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆனந்தா நகர், திருமகள் நகர், திருமால் நகர், வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர் (பகுதி), சுதானா நகர் முழுதும், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர் (பகுதி),அன்னை தெரேசா நகர், முருங்கபாக்கம்பேட், கமலம் நகர், பாப்பாஞ்சாவடி, ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும்
புதுச்சேரி சட்டப்பேரவை நாளை புதன்கிழமை (பிப். 12) காலை 9.30 மணிக்கு கூடும் என பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார். இதில் மாநிலத்தின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் முன் அனுமதி பெறுதல், சபை முன் வைக்கப்படும் ஆவணங்கள் இருப்பின் அவை வைக்கப்படுவதுடன், தணிக்கை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்ய உள்ளது.
புதுவை வணிக வரித்துறை கூடுதல் செயலாளர் முகமது மன்சூர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுவை வணிக வரித் துறையில் காலியாக உள்ள 4 உதவி வணிக வரி அதிகாரி பணியிடங்கள் துறை ரீதியிலான போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வை புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் பட்டப்படிப்பு முடித்த இளநிலை, மேல்நிலை எழுத்தர்கள், ஸ்டெனோ கிராபர்கள் எழுதலாம். விண்ணப்பங்களை துறை தலைவர்கள் மூலம் அனுப்ப வேண்டும்.
Sorry, no posts matched your criteria.