India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “புதுவையில் வாட்ஸ்ஆப் குழுக்களில் தற்போது பிரதான் மந்திரி கிஷன் நியூ யோஜனா போன்ற பெயா்களில் கடன் தருவதாகக் கூறி குறுஞ்செய்தி மற்றும் போலியான செயலிகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவை, இணையவழி மோசடியாளா்கள் உருவாக்கப்பட்ட போலி செயலிகளாகும். ஆகவே, அவற்றை யாரும் நம்ப வேண்டாம், என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிறருக்கு ஷேர் செய்யவும்..
புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
▶️பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
▶️அவசர ஊர்தி (Ambulance)-102, 108
▶️தீயணைப்பு-101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை-100
▶️குழந்தைகள் பாதுகாப்பு-1098
▶️பெண்கள் உதவி-1091
▶️சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
புதுவை பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் நேற்று காலை அவரது வீட்டிற்கு அருகேயுள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது இ.சி.ஆர் சாலையை சுந்தரி கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியதால் படுகாயமடைந்த சுந்தரி உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கு ஷேர் செய்யுங்கள்..
TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்களில் எச்சரிக்கையை மீறி மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டால் புதுவை அரசின் மீன்வளத்துறையால் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் நிறுத்தப்படும், என தெரிவித்துள்ளார்.
நெல்லித்தோப்பை சேர்ந்த ராமச்சந்திரனை வாட்ஸ் ஆப் மூலம் பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்ற திட்டம் தொடர்பான லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை உண்மை என நம்பி, ராமச்சந்திரன் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவிட்டு உள்ளார்.அதன்பின், சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 81 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்து, ஏமாற்றியுள்ளனர். அவர் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
புதுச்சேரிக்கு உட்பட்ட மணவெளி, திருக்கனூர், கொண்டாரெட்டி பாளையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (ஏப்.17) காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுமென்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…
புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சவுக்கான் இன்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கவும், கோப்புகளுக்கு விரைவாக அனுமதி வழங்க உயர் செயல்திறன் கொண்ட சாதனங்கள் வைத்திருப்பது அவசியம், இந்த சாதனங்களை வாங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி லேப்டாப், ஐபோன் சாதனக்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.