India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி – காரைக்கால் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்களின் நலன்கருதி கூடுதல் சிறப்பு பேருந்து இயக்க PRTC நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு மாலை 6.10க்கு ஒரு சிறப்பு பேருந்தும், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மாலை 5.30, 6.40 மற்றும் இரவு 9.05 மணிக்கு என மூன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் 2025 ஆம் ஆண்டு இன்று லாஸ்பேட்டை, அரசு பெண்கள் பொறியல் கல்லூரி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 40 முன்னணி புதுச்சேரி மற்றும் தமிழகம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. பங்கு பெற்று பயன் பெறுவீர்..
புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி ரூ. 29 கோடியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவு பெறும் நிலையில் திட்டமிடு ரூ.34 கோடியாக உயர்ந்து விட்டது. பஸ் நிலைய கட்டுமான பணி காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ரோடியர் மில் திடல் தற்காலிக பஸ் நிலையமாக செயல்பட்டது மேலும் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் வரும் மார்ச் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
மஞ்சள் அட்டை (ரேஷன் கார்டு) வைத்திருப்பவர் எல்லாம் வசதி படைத்தவர் அல்ல. எனவே மகளிர் உதவித்தொகை வழங்கும் போது மஞ்சள் அட்டை வைத்திருந்தாலும் வருவாய் சான்றிதழ் கொடுத்தால் அதை பரிசீலிக்க வேண்டும், என சட்டமன்றத்தில் எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று வருவாய் சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிருமாம் பாக்கத்தை அடுத்த பனித்திட்டு கடற்கரையில் குளிக்கச் சென்ற சபரீஸ்வரன் (13) எனும் சிறுவன் கடலில் மூழ்கி மாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் தேடினர். நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு சிறுவன் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் பிரதி வெள்ளி கிழமைகளில் புதுவை to காரைக்கால் மாலை 6.10 , காரைக்கால் to புதுவை மாலை 5.30, 6.40 பேருந்துகளும் மற்றும் திங்கள் கிழமைகளில் புதுவை to காரைக்கால் காலை 5.10, 5.25 இரண்டு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தினசரி பேருந்துகள் தவிர இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில் விடுபட்ட மாணவர்களுக்கும், 2025-26ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசியதில் “ஆளுநர் நாளை 15ஆம் தேதி குஜராத் செல்கிறார். பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார், நமது கோரிக்கைகளான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, நிதி கமிஷனில் சேர்ப்பது ஆகியவைகள் குறித்து அவர் பேசுவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறை கைதிகளின் அனைத்து தகவல்களும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். சிறை கைதிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நலனிற்காக ‘ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம்’ நடைமுறைப் படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் ஏழை கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
புதுச்சேரி மின்துறையில் 73 இளநிலைபொறியாளர் பணியடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி வகுப்பு வாரியாக பொது-30, பிற்படுத்தப்பட்டோர்-8, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-13, மீனவர்-1, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) -1, ஆதிதிராவிடர்-12, பழங்குடியினர்-1, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்-7, மாற்றுத் திறனாளிகள்-3 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு.
Sorry, no posts matched your criteria.