India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவர்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஜிப்மர் நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் நலச் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கையேடு வெளியிடப்படுகிறது. அதில், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயா், பதவி மற்றும் தொடர்புக்கு கைப்பேசி எண்கள் உள்ளிட்டவையும். மேலும் துறை சம்பந்தப்பட்ட முக்கிய இடங்கள், மழைப் பொழிவு உள்ளிட்ட பருவநிலை புள்ளிவிவரங்கள், பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை, காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை முதல் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை போலீஸ் அதிகாரிகள் செய்த வீரதீர செயல்களை பட்டியலிட்டு இந்த விருதுக்கு அனுப்ப, பரிந்துரைகளை வரும் 24ம் தேதிக்குள் டில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க கூறப்பட்டுள்ளது.
புதுவையில் பணியாற்றும் போலீசார் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ ரீதியாக தகுதியுடையவர் என சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகும். மருத்துவ பரிசோதனைக்கு பின், மருத்துவ அதிகாரி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவார். சீனியர் எஸ்.பி., எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து வருடாந்திர அறிக்கையை வரும் 30ஆம் தேதிக்குள் அனுப்ப சீனியர் எஸ் எஸ் பி அனிதா ராய் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் உத்தரவின்படி, தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், பிற துறைகளில் வகித்து வந்த கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்க கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுச்சேரி, தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டும் ஜவகர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
▶மாவட்ட நீதி மன்ற நடுவர்: 0413-2299502, ▶துணை ஆட்சியர் (தலைமையகம்): 0413-2299513, ▶துணை ஆட்சியர் (வடக்கு வருவாய்): 0413-2231251, ▶துணை ஆட்சியர் (தெற்கு வருவாய்): 0413-2667945, ▶மாவட்ட பதிவாளர்: 0413-2247194, ▶துணை ஆணையர் (கலால்): 0413-2252847. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
தரங்கம்பாடி அருகே கீழையூர் கடைமுடிநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவனின் சாபம் பெற்ற பிரம்மா இங்குள்ள சிவபெருமானை வேண்டி மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது. ஆகையால் இங்கு மனமுருகி மன்னிப்பு கோரினால் நாம் செய்த தவறுகளுக்கு சாபவிமோஷனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபட்டால் காசி சென்ற புண்ணியம் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்
மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
புதுச்சேரி மின்சாரத் துறை கட்டுமான உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. அதன்படி, இதற்கு 25 ஏப்ரல் 2025 பிற்பகல் 3 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விருப்பமுடைய 18 முதல் 25 வயது வரை உள்ள தகுதிவாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ <
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் 22.04.25 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.