Pondicherry

News April 24, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்பி நாரா சைத்தானியா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இளம்பெண்களுக்கு கூறும் அறிவுரை என்னவென்றால் சமூகவலை தளங்களில் முகம் தெரியாத நபர்களின் பிரண்ட்ஸ் ரெகுவஸ்ட் ஏற்றுக்கொள்ளக்கூடாது. முகம்தெரியாத நபரிடம் பேசவேண்டாம். பெண்கள் உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு எந்த ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிரவேண்டாம்” என்று  எச்சரித்துள்ளார்.

News April 24, 2025

புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

image

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ரூ.50,000 வரை சம்பளத்தில் காலியாக உள்ள Guest Faculty (English) பணியிடம் நிரப்ப உள்ளதாகவும், 28.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க…

News April 24, 2025

புதுச்சேரியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

image

புதுச்சேரி கரியமாணிக்கம், ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(21). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 23, 2025

எமபயம் போக்கும் திருக்கடையூர் அமிர்த்கடேஸ்வரர்

image

காரைக்கால் அருகே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு அமிர்தகடேஸ்வரரும், அபிராமி அம்மையாருக் மூலவர்களாக உள்ளனர். தன்னை நாடி வந்த மார்க்கண்டேயனின் உயிரை எமனிடம் இருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய், தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள சிவனுக்கு பாசக்கயிறு தடம் இருப்பாத கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 23, 2025

புதுச்சேரி: ரூ.35,000 சம்பளத்தில் வேலை

image

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவியின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் ரூ.75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) <>https://ncrtc.in/<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!

News April 23, 2025

புதுச்சேரி பால்பவன் பயிற்றுநர்கள் 56 பேர் இடமாற்றம்

image

புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் கீழ், மாநிலம் முழுவதும் ஜவகர் சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஜவஹர் சிறுவர் இல்லங்களில் பணிபுரியும் 56 பயிற்றுநர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை துணை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் நேற்று பிறப்பித்துள்ளார்.

News April 23, 2025

புதுச்சேரி துணை ஆட்சியர் அலுவலகம் தொடர்பு

image

புதுச்சேரி துணை ஆட்சியர் அலுவலகங்களின் தொடர்பு எண்கள்: துணை ஆட்சியர் (தலைமையகம்): 0413-2299513 , துணை ஆட்சியர் (வருவாய்) வடக்கு: 0413-2231251 , துணை ஆட்சியர் (வருவாய்) வடக்கு மின்னஞ்சல்: dcrnorth.py.gov.in துணை ஆட்சியர் (வருவாய்) வடக்கு தொலைநகல்: 0413-2248759. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News April 23, 2025

 புதுவை: தனியார் நிறுவனத்தில் ரூ.50,000 கொள்ளை

image

புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரகாஷ்(40) என்பவர் அலுவலராக உள்ளார். இந்நிலையில், நிறுவனத்துக்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து டிராயரில் இருந்த ரூ.50 ஆயிரத்தைத் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 23, 2025

புதுவை: சிறுமி பாலியல் வன்கொடுமை-20 வருட சிறை

image

புதுச்சேரியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும், வீடு கொடுத்து உதவிய அவரது நண்பர் கதிர்வேல் (29) என்பவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்க புதுச்சேரி அரசுக்கு, பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

News April 22, 2025

புதுவை: பிரமிப்பூட்டும் அதிசய கோவில்

image

கோவில் என்றாலே கோபுரமும் கலசமும் இருக்கும் என்பதிலிருந்து முழுமையாக மாறுபட்ட கோவில்தான் புதுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கார்னேஸ்வரர் நடராஜர் கோவில். வழக்கமான கோவில் போல இல்லாமல் பிரமிடு வடிவில் அமைந்துள்ள இக்கோவிலில் சென்று வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். SHARE IT.

error: Content is protected !!