India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 காரைக்கால் மாவட்டத்தில் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திவிடுவர். இவை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவர்கள் மேற்கொள்வர். மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபர் படகு மூலம் தினமும் மீன்பிடிப்பதில் மீனவர்கள் ஈடுபடுவர்.
புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் சம்தர்யா, பிரியங்கா சம்தர்யா தம்பதியின் இளைய மகன் ஹார்திக் (13) துறவறம் மேற்கொள்ள முன்வந்துள்ளார். இதனை அந்த குடும்பத்தினர் ஏற்றனர். அதையடுத்து புதுவை சித்தன்குடியில் உள்ள ஜெயின் கோயிலில் இருந்து ஆன்மிக ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை அடுத்து அகமதாபாத் புறப்பட்டு சென்று வரும் 28-ல் ஹார்திக்கு தீட்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
புதுவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து நேற்று உப்பளம் தொகுதியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி விடுதலையான பிறகு அவரை சட்டமன்றத்திற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி முத்தம் கொடுத்தவர் ஸ்டாலின்.
அவரை ராகுல்காந்தி கட்டி பிடித்து ஆரத்தழுவியதை ராஜீவ்காந்தியின் ஆன்மா கூட மன்னிக்காது” என பேசினார்.
புதுவையில் மகாவீர் ஜெயந்தி ஏப்.21 இல் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு புதுவை நகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “புதுவை நகராட்சிப் பகுதிகளில் கால்நடை அறுவை நிலையங்கள், ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள், மீன்கடைகள் ஆகியவை வரும் 21 ஆம் தேதி மூடப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை மீறி இறைச்சி, மீன்கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்ப் புத்தாண்டு தமிழா் வாழ்வோடு ஆழமாக வேரூன்றியுள்ள பாரம்பரிய கலாசாரப் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்கூறும் உன்னதப் பண்டிகை. பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்விலும், நிறைந்த வளம், மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் A.M.கிருஷ்ணமூர்த்தி நேற்று இயற்கை எய்தினார். அவர் முதன்முதலாக 2001 ஆம் ஆண்டு புதுச்சேரியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டுவரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மக்களவைத் தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்கினை பெறுவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் துறை சார்பில் காரைக்கால் பேருந்து நிலையத்தில் தேர்தல் விளம்பரங்கள் அடங்கிய விளம்பரப் பலகையில் பொதுமக்கள் ஆர்வமாக செல்பி எடுத்து தங்கள் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மக்களவை வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே 15 ஆம் தேதி புதுவை வருகிறார். அதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு பணி குறித்து முன்னாள் துணை சபாநாயகர் பாலன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பெற வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலைக்கவும் – இன்பமும் மகிழ்ச்சியும் பெருகவும் – ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன் என புதுச்சேரி ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.