India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை: முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் யோகா வகுப்பு நாளை 17-ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. இந்த யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94432-77486, 94432-75040 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
புதுவை, கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிா்வேல் (53). இவா் மத்திய அரசு நிறுவனத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ளாா். இவர் வீட்டில் மடிக்கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மேஜையில் வைத்து விட்டு வெளியே சென்றபோது மா்மநபா்கள் கதிா்வேலின் வீட்டின் உள்ளே புகுந்து மடிக்கணினி, ஆவணங்கள் என ரூ.4 லட்சம் மதிப்புள்ளவற்றைத் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்ட செய்தியில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கவும், விற்பதற்கும் வழங்கப்பட்ட உரிமங்கள் வரும் ஏப்ரல்.17-ஆம் தேதி முதல் ஏப்ரல்.20-ஆம் தேதி வரையிலும், ஜூன் 2-ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையிலும் தற்காலிமாக தடை செய்யப்படுகிறது. மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கரை திரும்பி தங்களது படகுகளை மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனை அடுத்து புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகள் பழுது பார்க்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
சர்வதேச திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே உள்ள பாரதி பூங்காவில் திருநங்கைகள் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினர். திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி கீழ் புத்துப்பட்டு பகுதியில் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த பேருந்தும் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரும் நேருக்கு இன்று காலை நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், காரில் சென்ற இரண்டு பேர் மற்றும் ரோட்டில் நடந்து சென்ற இருவர் என 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கீழ் புத்துப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). இவா், நேற்று அதிகாலை பைக்கில் மிஷன் வீதி பகுதியில் சென்றாா். அப்போது கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி நடைபெறும் பகுதியில் பைக்குடன் தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
புதுச்சேரி தேர்தல் அலுவலகம் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பாக, புதுச்சேரியில் இயங்கும் பி.ஆர்.டி.சி. பஸ்களில் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான பேனர் வைத்து புதுச்சேரி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணல் அம்பேத்கார் பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் இல்லை என்ற உயர்ந்த நீதியை நிலை நாட்ட தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனத் தெரிவித்தார். மேலும், அவரை போன்ற மகத்தான தலைவர் அரசியல் சாசனத்தையே இந்த தேசத்திற்காக உருவாக்கி தந்தபோது எதிலும் அவர் தலைக்கனம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நாளை மாபெரும் பொதுக்கூட்டம் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.