Pondicherry

News April 24, 2024

புதுவையில் தேர்தல் துறைக்கு கலால் துறை கோரிக்கை

image

புதுவையில் தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படைகள், சோதனைச்சாவடி கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டன. ஆனால், மதுபான கடை விற்பனை நேரம் குறைப்பு ரத்து செய்யப்படவில்லை. இதனால் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை பழையபடி அறிவிக்கவும், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெறவும் தேர்தல் துறைக்கு கலால் துறை கோப்பு அனுப்பி உள்ளது.

News April 24, 2024

மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

image

புதுவை லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை (என். சி. சி.) மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் 225 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று நடைபெற்றது. முகாமில் பங்கேற்றுள்ள என்.சி.சி., மாணவர்கள் ஆர்வமுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

News April 24, 2024

புதுச்சேரி: ஓய்வூதியதாரர்கள் வாழ்வாதார சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

image

புதுச்சேரி மாநில அரசின் கணக்கு மற்றும் கருவூலத்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கருவூலக அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 2024ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதி சான்றிதழ் வரும் மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் வழங்க இயலாது கூறப்பட்டுள்ளது.

News April 24, 2024

புதுச்சேரி: தடுத்தவருக்கு கழுத்தில் கத்தி குத்து

image

காரைக்கால் அடுத்த குரும்பகரம் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், அவரது தாய்
மல்லிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டில்
வசிக்கும் சந்திரபாபு என்பவர் ஏன் தாயிடம் சண்டை போடுகிறாய் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கலையரசன் சந்திரபாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் கலையரசனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 24, 2024

புதுவையில் ரேஷன் கடைகள் திறக்கப்படும்

image

காரைக்காலில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் வெற்றி பெற்றவுடன் புதுச்சேரி மாநிலத்தில் மூடி உள்ள ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து மாநில மக்களுக்கு இலவச அரிசிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.

News April 22, 2024

புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

image

புதுவை வில்லியனுார் ஆரியப்பாளையம் புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை நான்காம் கால பூஜை, யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10:05க்கு புட்டலாய் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 21, 2024

காரைக்காலில் பாஐக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

காரைக்கால் மாவட்டத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் ராஜசேகர், மாவட்ட தலைவர் முருகதாஸ், மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 21, 2024

புதுச்சேரி முதல்வர் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து

image

நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், “அனைத்து உயிரினங்களும் அன்போடும் மரியாதையோடும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை போதித்த பகவான் மகாவீரர் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எந்து அன்பான இனிய மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்” என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

புதுச்சேரி: மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

image

நாளை (ஏப்.21 ) மகாவீர் ஜெயந்தி தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வருடா வருடம் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் நாளை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

News April 20, 2024

புதுவையில் 3 அடுக்கு பாதுகாப்பு

image

லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூமுக்கு முன்பாக துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் ஸ்ட்ராங் ரூம் மற்றும் 3 அடுக்கு பாதுகாப்பை ஆய்வு செய்தார். இதனையடுத்து, கட்சி முகவர்களுடன் அவர் கூட்டம் நடத்தினார்.

error: Content is protected !!