Pondicherry

News April 30, 2024

நிலக்கரி வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு

image

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி லாரிகளில் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்படும்போது சாலையில் நிலக்கரி துகள்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் காரைக்கால் வழியாக நிலக்கரி ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு காரைக்கால் போக்குவரத்து காவல்துறை சார்பில் நேரக் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 9 மணி வரை இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

News April 29, 2024

புதுச்சேரியின் புனித இதய பசிலிக்கா சிறப்பு!

image

புனித இதய பசிலிக்கா ஆலயம் புதுச்சேரி ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. 1902- 1907ஆம் ஆண்டு இவ்வாலயம் கட்டப்பட்டது. மேதகு.காந்தியால் 1907 இல் அருட்பொழிவு செய்து முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 2008-2009 இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக பசிலிக்காவை சேர்த்து தமிழகத்தில் 6, இந்தியாவில் 20 மற்றும் ஆசியாவில் 50 பசிலிகாக்களும் உள்ளன.

News April 29, 2024

புதுவையில் மாணவர்கள் தவிப்பு

image

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை & முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு கியூட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன்படி கியூட் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்ய இணையத்தில் தேடி வருகின்றனர். ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவம் கிடைக்கவில்லை. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதை கால நீட்டிப்பு செய்ய கோரிக்கை வைத்தனர்.

News April 29, 2024

போதை பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு

image

புதுவை திருக்கனுார், காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் கஞ்சா போதை பொருட்கள் தொடர்பான இளைஞர்கள் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. லிங்காரெட்டிப்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் முன்னிலை வகித்தனர்.
இதில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

News April 28, 2024

புதுவை மக்களுக்கு மின்துறை எச்சரிக்கை

image

புதுவை அரசு மின்துறை (தெற்கு) கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோயில், வாதானூர், கரியமாணிக்கம் உட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்கட்டணம் நிலுவை கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்துறை தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

புதுவையில் விளையாட்டு போட்டி

image

புதுவை அரசு கல்வித்துறை & விளையாட்டு துறை சார்பில், 17 &19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், கதிர்காமம் அரசு பள்ளி, புதுவை பல்கலைக்கழகம், அமலோற்பவம் பள்ளி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

News April 28, 2024

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

image

புதுவைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தமிழகத்தை போல்
வெயில் தாக்கமும் இல்லை. இதனால் வெளி மாநிலங் களில் இருந்து புதுவைக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது . சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக கடற்கரை, பாண்டி மெரினா, ஊசுட்டேரி படகு உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

News April 28, 2024

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

image

புதுவை நெட்டப்பாக்கம் சொரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ராம நவமி உற்சவம் துவங்கி, தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 12வது நாளான நேற்று காலை திவ்ய பிரபந்த சேவையும், இரவு சீதா கோதண்டராமன் திருக்கல்யாணம் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 27, 2024

புதுச்சேரி சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்

image

வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிக சூரிய வெப்பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

News April 27, 2024

புதுவையில் காவலரின் பாராட்டை பெறும் சமூக ஆர்வலர்

image

புதுவை கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வரும் சமூக ஆர்வலரான அருண் தன்னுடைய வாகனத்தில் ஐஸ் பெட்டியில் மோர், நன்னாரி சர்பத், இளநீர், குடிநீர், லெமன் ஜூஸ் ஆகியவற்றுடன் வெயிலில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கே சென்று அவர்கள் விரும்பிய குளிர்பானங்களை இலவசமாக கொடுத்து வருகிறார்.

error: Content is protected !!