India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், “புதுச்சேரி அமைச்சராக இருந்து மக்கள் சேவையாற்றிய உங்களது சேவை என்றும் தொடரட்டும். புதுவையில் பாஜகவை மேலும் வலிமையானதாக்கும் வகையில் தாங்கள் செயல்படவேண்டும். மக்களவைத் தேர்தலில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற்று மக்களவைக்கு வருவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காரைக்காலில் புதுச்சேரி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவிருக்கின்ற நிலையில் வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. இதனை அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கு இயந்திரங்கள் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
புதுவை 100 அடி ரோடு ஜான்சி நகரில் முருகேசன் பைனான்சியர் என்பவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் இருந்த ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டு என ரூ.1 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் செல்லாத ரூ.2 ஆயிரம் நோட்டை ரூ. 1 கோடி அளவில் வைத்திருப்பது ஏன் என்றும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
புதுவை வாக்குச்சாவடி கண்காணிப்பு பணியில் 1,600 போலீசாரும், பாதுகாப்பு பணியில் 3,000 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை(ஏப்.19) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்கும் வரை அனுமதி அளிக்கப்படும்.
புதுச்சேரியில் மின்துறை இயக்குதல் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் ராஜேஷ்சன்யால் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் பணிகளால் இன்று மற்றும் நாளை மின்துறையில் உள்ள அனைத்து கணினி வசூல் மையங்களும் இயங்காது. எனவே, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை சம்பந்தப்பட்ட மின்துறை இணையத்தில் செலுத்தும்படி” தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி காலை 6 மணி வரை சட்டவிரோதமான கூட்டம், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதும் கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுவதும் தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால் இந்திய தண்டனை சட்டம் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காரைக்காலில் வாக்காளர்களுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினர் பணம் தருவதாகவும் இதனால் உடனடியாக புதுவை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இன்று காரைக்கால் அதிமுக மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரி, தவளக்குப்பத்தை சேர்ந்தவர் மருத்துவர் வினோதினி. இவர் கடந்த 4 ஆண்டுகளாக குடிமைப் பணித் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் வினோதினி தேசிய அளவில் 64-ஆவது இடத்தையும் புதுச்சேரியில் முதல் இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை சந்திரன் புதுச்சேரி காவல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு புதுச்சேரியில் இன்று (ஏப்.17) மாலை 6 மணி முதல் 1 ஏப்.20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். மேலும் மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
புதுச்சேரி தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் தொகுதி முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
Sorry, no posts matched your criteria.