Pondicherry

News May 15, 2024

அரசு அதிகாரிகள் தாமதமாக வந்தால் நடவடிக்கை

image

புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல் இருப்பதால் பொதுமக்களுடைய சேவைகள் பாதிக்கப்படுவதாக புகார் வந்து கொண்டிருக்கின்றது. எனவே தாமதமாக வரும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாக சீர்திருத்தத்துறை துறைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

News May 15, 2024

பாண்டிச்சேரி: தூய அமல உற்பவ அன்னை பேராலயம் சிறப்புகள்!

image

பாண்டிச்சேரியில் உள்ள பழமையான பேராலயம், சம்பா கோயில் என்றழைக்கப்படுகிறது. பல வருடங்களாக இந்த பேராலயம் கட்டப்பட்டு வந்தது. இறுதியில் 1791 இல் இந்த தேவாலயம், பிஷப் சாம்பெனோயிஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், கோபுரம் கட்டப்பட்டது. 1970 மற்றும் 1787 இல் மறுசீரமைக்கப்பட்டது. இந்த தேவாலயத்தில் பல சிலைகள் மற்றும் பலிபீடங்கள் உள்ளன.

News May 15, 2024

புதுச்சேரி: ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு

image

புதுச்சேரி அரசு நிதித்துறை செயலர் சிவக்குமார் பிறப்பித்த உத்தரவில் புதுச்சேரி மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரை ஜனவரி 1.2024 முதல் முன் தேதியிட்டு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக 46 சதவீதத்தில் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது.

News May 15, 2024

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை..!

image

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Research Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.இதற்கு MA / M.Phil./ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த <> LINK <<>>தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ritutyagi123@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24.05.2024ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

News May 15, 2024

புதுவை தாகூா் அரசுக் கல்லூரி வளாகம் சுற்றுலாத் தலமாக அங்கீகரிப்பு

image

புதுவை தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியை கட்டாயம் பாா்க்க வேண்டிய இடமாக மத்திய அரசின் சுற்றுலாத் துறை அங்கீகரித்து உள்ளதாக கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ் நேற்று தெரிவித்தார். கல்லூரி வளாகத்தில் பசுமை புதுச்சேரி எனும் பொருளில் நகா்ப்புற காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 110- க்கும் மேற்பட்ட உயிரினங்கள், 7, 000 தாவரங்கள், மயில் உள்ளிட்ட 25 வகை பறவைகள், 30 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன.

News May 15, 2024

புதுவையில் மாநில தடகளப் போட்டி

image

புதுவை மாநில விளையாட்டுத் துறை & இளைஞா் நல இயக்குநரகம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில தடகளப் போட்டி புதுவை கோரிமேடு ஆயுதப் படையில் நேற்று காலை தொடங்கியது. இன்று (மே.15) 200 மீட்டா்,600 மீ. ஓட்டம், 100 மீ. தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள் ஜம்ப், ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெறுகிறது.

News May 14, 2024

புதுச்சேரி: விரட்டி விரட்டி கடித்த நாய்கள்

image

நெல்லிதோப்பு தொகுதிக்குட்பட்ட சுப்ரமணி கோயில் வீதியில் இன்று அதே பகுதியை சேர்ந்த கர்த்திகேயன், வேல்முருகன் நகரை சேர்ந்த சிவா, டான் பஹதூர், கண்ணன், உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டவர்களை தெருநாய் கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தெருநாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 14, 2024

ராட்சத ராட்டினங்கள் இயக்க தடை

image

காரைக்கால் கடற்கரை பகுதியில் 2 பெரிய ராட்சத ராட்டினங்கள் உரிய பாதுகாப்பு இன்றி அதிக உயரத்துக்கு சுற்றி வருவதாக சுற்றுலா பயணிகளிடம் இருந்து தொடர் புகார் வந்தன. இதையடுத்து நகராட்சி ஆணையர் சத்யா ராட்டினத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரிய தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. உரிய பாதுகாப்பு சான்றிதழ் இன்றி இயக்கப்பட்ட ராட்டினங்கள் இயக்க தடை விதித்து நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

News May 14, 2024

புதுவையில் சைபர் கிரைம் உதவி மைய எண் அறிவிப்பு

image

புதுவையில் இணைய வழி குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நேற்று சைபர் கிரைம் போலீசார் 1930 என்ற உதவி மைய எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த எண்ணை தொடர்பு கொண்டவுடன் நேரடியாக சைபர் கிரைம் போலீஸ்க்கு இணைப்பு செல்லும்.24 மணி நேரமும் இந்த எண்ணில் வரும் புகார்களை விசாரிக்க முதலில் திட்டமிட்டு இதற்கான பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

News May 14, 2024

புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு அபராதம்

image

இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3 ஆம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

error: Content is protected !!