India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில், தற்போது 75 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் 22-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.

புதுச்சேரியில், தற்போது 75 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் 22-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

புதுச்சேரியை சேர்ந்தவர் தாவீது அன்னுசாமி(99). இவர் முன்னாள் புதுவை தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு நீதிபதி. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தாவீது அன்னுசாமி நேற்று உயிரிழந்தார். இவர் பெத்திசெமினார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தார். மேலும் இவரது உடலை அரசு மரியாதை உடன் அடக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழந்துள்ளது.

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.!

புதுச்சேரி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும்.
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

புதுவை நெல்லித்தோப்பை சேர்ந்தவர் பசுபதி(31). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி ரம்யா, பசுபதியை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த படுபதி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுவை, காரைக்கால் ஜிப்மரில் 110 முதுநிலை மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு. இந்த பணிக்கு 3 ஆண்டு பதவி வழங்கப்படும், ஜிப்மர் மண்டல புற்றுநோய் மையத்தில் வரும் பிப்ரவரி 9, 10,மற்றும் 11-ஆம் தேதிகளில் காலையில் எழுத்து தேர்வு, மதியம் நேர்காணல் நடக்கிறது. ஜிப்மர் இணையதளத்தில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி தெரிவித்துள்ளார்.

கடலூர், கோண்டூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் கணேஷ்பாபு(54). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் சம்பவத்தன்று, முள்ளோடையிலுள்ள பாரில் மது குடிக்க வந்துள்ளார். அப்போது மயங்கி கீழே விழுந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.