India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கல்யாணசுந்தரம் தோட்டத்தில் விளையும் பலாப்பழங்களை சட்டசபையில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அவர் சட்டசபையில் வழங்கினார். முன்னதாக அவர் முதலமைச்சர் அறையில் சென்று முதலமைச்சருக்கு பலா பழங்களை வழங்கினார்.
புதுச்சேரியில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
இன்று காலை 10:00மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்காணும் இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் முருங்கப்பாக்கம் அன்னை தெரேசா நகர் அரவிந்தன் நகர் ரங்கசாமி நகர், நயனார் மண்டபம் சுதனா நகர் சில பகுதி நகர் கிழக்கு வாசல்நகர் கணபதி நகர்
மகாலட்சுமி நகர் அரியாங்குப்பம் நோணாங்குப்பம் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்
புதுவையை சேர்ந்த சரவணன்குமாரிடம் மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி அவரிடமிருந்து ரூ.36 ஆயிரம், சூரியாவிடம் ரூ. 71 ஆயிரம், சுதாவிடம் ரூ.15 ஆயிரம் , கீர்த்தி வர்மனிடமிருந்து ரூ. 18 ஆயிரம், ஐயப்பனிடமிருந்து ரூ.10 ஆயிரம், கதிரவனிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை பெற்று ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
புதுவை
செயின்ட் தெரஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடம் ஸ்ரீதேவி பூதேவி சமேத அனந்தரங்க நாதர் சன்னதியில் ராமானுஜரின் 1007வது அவதார திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் கோலாகலமாக நடந்தது.
ராமானுஜரின் உருவச்சிலை உள்புறப்பாடு செய்யப்பட்டு காலை 11 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்கும் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் செவிலியர்கள். இந்த நாளில் மற்றவர்கள் சுகாதாரமாக, நலமாக வாழ, அர்ப்பணிப்புடன் கூடிய சேவையையும் கடின உழைப்பையும் நல்கும் செவிலியர் அனைவருக்கும் செவிலியர் தின நல்வாழ்த்துக்களை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
கர்நாடகாவில் இருந்து புறப்படும் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை புதுச்சேரிக்கு வருகிற 19ம் தேதி இரவு வருகை தர உள்ளது. அந்த ஜோதி யாத்திரையை வரவேற்பது தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி.யுடன் புதுச்சேரி மாநில ஐஎன்டியூசி தலைவர் ஜி.ஆர். பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார்
மதுபானம் கொள்கையால் கடந்த மாதம் கைது செய்யபட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, இதை கொண்டாடும் விதமாக நேற்று புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சாமி சண்முகசுந்தரம், கவுரவ தலைவர் சந்திரன், ஜெயராஜன் , ஜெயக்குமார், கமலா, மகாலட்சுமி, ஜெயா, மற்றும் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்
புதுவை முத்தரையர்பாளையம் முத்துகுமரன் . இவருக்கும் அஜய் மற்றும் அவரது நண்பர்கள் முன்விரோதம் இருந்து வந்தது. அவர்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டு முத்துகுமரன் வீட்டு வாசலில் நின்ற அவரது பைக்கை, கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். தட்டி கேட்ட முத்துகுமரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அஜய் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.