India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்து செய்தியில், மக்களை உயர்ந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என்கிற இலட்சிய நோக்கோடு நபிகள் நாயகம் அவர்கள் இவ்வுலகில மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் கருத்தாழம் மிக்கவை இந்நாளில், அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அருளிய அருட்போதனைகளை நெஞ்சில் நிறுத்தி, இவ்வுலகை அன்பு கருணை, சமரசம் நிறைந்ததாக உருவாக்க உறுதி ஏற்போம் என்றார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் இன்று சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிறை காவலர்கள் விவேகானந்தனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குரும்பாபேட் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மேட்டுபாளையம், சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் நகர், ராம் நகர், சொக்கநாதன்பேட்டை, ரத்னா நகர் ஒரு பகுதி, கனகன் ஏரி. கவுண்டன்பாளையம்,கதிர்காமம். திலாசுபேட்டை, காந்தி நகர் ஒரு பகுதி, வான்ஒலி நகர், பசும்பொன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஒதியஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் J. சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில் ஓணம் பண்டிகை இன்று விமர்சியாக கொண்டாடப்பட்டது இதனை ஒட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள கேரளா சமாஜ நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நேரில் சந்தித்து ஓணம் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.அப்போது ஆளுநர் மாளிகை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
புதுவை ஆளுநர் மாளிகை, அலுவலக அறைகள், மின்வசதி. தரைதளம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.3.88 கோடியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. சுவர்னர் கைலஷ்நாதன் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் லட்சுமி நாராயணன். கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
குரும்பாபேட் துணைமின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.16) மேட்டுபாளையம், சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் நகர், ராம் நகர், சொக்கநாதன்பேட்டை, ரத்னா நகர் ஒரு பகுதி, கனகன் ஏரி. கவுண்டன்பாளையம்,கதிர்காமம். திலாசுபேட்டை, காந்தி நகர் ஒரு பகுதி, சத்யமூர்த்திநகர், வான்ஒலி நகர், பசும்பொன் நகர், குண்டுசாலை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய மக்கள் நீதி மன்றம் நேற்று நடந்தது. புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் சுந்தர் வழிகாட்டுதலின் படி, நடந்த லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளுக்கு நடந்த லோக் அதாலத்தில் 857 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 கோடி 70 லட்சத்து 756 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்காலத்தை உருவாக்க புதுப்புது தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும் பொறியாளர்கள் சமுதாயத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளைப் வரவேற்பதும் அங்கீகரிப்பதும் நமது கடமையாகும். இந்நாளில் பொறியாளர்கள் அனைவருக்கும் பொறியாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் அகம் மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.
வேண்டியவர்களுக்கு புறவாசல் வழியாக பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏமாற்றுகிறீர்கள்?. 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு, நியாயமான தேர்வை நடத்த முடியாதா என்று சட்ட விரோதமாக பணி நியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.