Pondicherry

News February 25, 2026

காரைக்காலில் 2 இடங்களில் நெல் கொள்முதல்

image

நடப்பாண்டில் இந்திய உணவுக் கழகம் மூலம் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் மாதூர் அரசு விதைப்பண்ணை ஆகிய இரண்டு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் நன்கு தூற்றி சுத்தம் செய்யப்பட்ட நெல்லை மட்டுமே கொண்டு வர வேண்டும். உடன் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகலை கொண்டு வர வேண்டும் என்று கூடுதல் வேளாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

புதுச்சேரி மக்களே.. இலவச WIFI வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க் மூலம் <<>>விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

புதுச்சேரி: டிகிரி தேர்ச்சி போதும்… வங்கி வேலை

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 25, 2026

புதுச்சேரி எஸ்.ஐ எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

image

புதுச்சேரி காவல்துறையில் எஸ்.ஐ எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் தினகர் என்பவர் முதலிடத்தையும், ஹரிஹரன் என்பவர் 2-ம் இடத்தையும், ஹரிகிருஷ்ணா என்பவர் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் மோனிகா என்பவர் முதலிடத்தையும், வனிதா லட்சுமி என்பவர் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த முடிவுகளை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று வெளியிட்டார்.

News February 25, 2026

உழவர்கரை பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

image

புதுவை விமான நிலைய மைதானத்தில் பாஜக சார்பில் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இது தொடர்பாக ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவைக்கு மார்ச் 1-ம் தேதி பிரதமர் வருகையையொட்டி, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள், பலூன்கள் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News February 25, 2026

புதுச்சேரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 25, 2026

புதுச்சேரி: மின் நுகர்வோர் குறைதீர் முகாம் அறிவிப்பு

image

காரைக்காலில் மின்சார சட்டம் 2003 விதிகளின் கீழ் யூனியன் பிரதேசங்கள் மற்றும் கோவா மாநிலத்தின் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நுகர்வோர் குறைதீர் அவை இன்று (25.02.2026) நடைபெறவுள்ளது. காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், நுகர்வோர் குறைபாடுகள் சம்பந்தமாக நேரடியாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2026

புதுவை: கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலத்த காயம்

image

தவளக்குப்பம் அருகிலுள்ள நல்லவாடு வடக்குத்தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (28) தலைமையில் 5 பேர் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக எழுந்த பெரிய அலையில் படகு கவிழ்ந்து, அனைவரும் கடலில் விழுந்துள்ளனர். இதில் சதீஷ் என்பவர் பலத்த காயம் அடைந்தார். மற்றவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். இது குறித்து தவளக்குப்பம் போலீசார் மற்றும் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2026

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் (UAV) மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுவோருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!