India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் கோடை விடுமுறை 12 நாட்கள் கடும் வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் முழுநாள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 5 சனிக்கிழமைகளில் முழுநாள் இயங்கிய நிலையில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டும் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுவை பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு கடந்த 30ஆம் தேதி கலந்தாய்வு அறிவிக்கப்பட்டிருந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றிய பின் கலந்தாய்வு நடத்த கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணியிட கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு நேற்றும், இன்றும் நடைபெறும் என கல்வித்துறை துணை இயக்குனர் ஆதர்ஷ் தெரிவித்திருந்தார். இந்த கலந்தாய்வு இரண்டாவது முறையாக நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு செயலராக பணியாற்றிய அன்பரசு ஐ.ஏ.எஸ் மகள் திருமண வரவேற்பில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பொழுது புதுச்சேரி சபாநாயகர் செல்வம் அவருக்கு சால்வை அணிவித்தார். இதில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னால் முதல்வர் நாராயணசாமி இதுவரை இல்லாத அளவுக்கு புதுவையில் மின் கட்டணம் தற்போது உயா்த்தப்பட்டுள்ளது உயா்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தற்போது போல மின் கட்டணத்தை உயா்த்தவில்லை. எனவேதான், மக்கள் இண்டியா கட்சிகளின் போராட்டத்துக்கு முழு ஆதரவளித்துள்ளனர். ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மக்களவைத் தோ்தலைப் போல வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் காலியாக உள்ள கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு இதுவரை சென்டாக் மூன்று கட்ட கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்பியுள்ளது. நான்காம் கட்ட கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு இன்றுவரை கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க கால அவகாசத்தை சென்டாக் நீட்டித்துள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னால் முதல்வர் நாராயணசாமி இதுவரை இல்லாத அளவுக்கு புதுவையில் மின் கட்டணம் தற்போது உயா்த்தப்பட்டுள்ளது உயா்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தற்போது போல மின் கட்டணத்தை உயா்த்தவில்லை. எனவேதான், மக்கள் இண்டியா கட்சிகளின் போராட்டத்துக்கு முழு ஆதரவளித்துள்ளனர். ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மக்களவைத் தோ்தலைப் போல வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காரைக்கால் மற்றும் மாஹே பிராந்தியத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்க பட்டோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முற்றிலும் தற்காலிகமானது. தேர்வான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான சிவா உயர்த்தப்பட்ட மீன் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர் இந்த பந்த் 100% வெற்றி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கூட்டணி தலைவர்களை கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகும் என்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி மின்கட்டண உயர்வை ஈடுகட்டும் வகையில் பொதுமக்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி 2 மாதங்களுக்கு சேர்த்து மின்கட்டண மானியம் வழங்கப்படும். மின்கட்டண ரசீதில் மானியத் தொகை கழிக்கப்படவுள்ளது. அரசியல் லாபத்துக்காகவே எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி புதுவையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மாநில அந்தஸ்துதான் ஒரே தீர்வாக அமையும். மாநில அந்தஸ்து பெறுவதற்காக டெல்லிக்கு செல்லவுள்ளேன். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுவைக்கான உரிமைகளைப் பெறுவதற்கு மாநில அந்தஸ்து தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.