Pondicherry

News September 21, 2024

புதுச்சேரி முதலமைச்சர் நேரில் ஆய்வு

image

புதுச்சேரியில் தற்போதைய துணைநிலை ஆளுநர் மாளிகை புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்காலிக துணைநிலை ஆளுநர் இல்லம் மற்றும் அலுவலகத்தை பழைய சாராய ஆலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் ரங்கசாமி இன்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News September 21, 2024

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அதிமுக கோரிக்கை

image

புதுச்சேரியில் இன்று அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் பொண்ணுக்கு வீங்கி என்ற அம்மை நோய் பள்ளி மாணவர்களுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News September 21, 2024

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பு

image

இந்திய கடலோரக் காவல்படை சார்பில் இன்று புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் நடைபெற்ற சர்வதேச கடற்கரை தூய்மை தினம் நிகழ்ச்சியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான இந்திய கடலோரக் காவல்படை மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 21, 2024

ஒரே நாடு ஒரே தோ்தல் நடைபெறத்தக்க சூழல் இல்லை: நாராயணசாமி

image

புதுவை பெரிய கடை காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரே நாடு ஒரே தோ்தல் நடைபெறத்தக்க சூழல் இல்லை. மாநில ஆட்சி கலைக்கப்பட்டால், மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் பதில் கூறப்படவில்லை. அந்தத் திட்டத்துக்கு இண்டியா கட்சிகளைப் போலவே பாஜக கூட்டணி கட்சியினரும் எதிா்ப்பு தெரிவிப்பா் என்றார்.

News September 21, 2024

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் செய்தி குறிப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பரவி வருவதாக சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்கவும் சுடுநீர் பருகவும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News September 21, 2024

திருநள்ளாறு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவில் சொத்துக்களை அபகரிப்பு

image

வழிகரையம்மன் கோயில் விவகாரம் இரு குடும்பங்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை கும்பாபிஷேகம் விரைவில் நடக்கும். சனீஸ்வர பகவான் கோயில் நிலங்கள் மோசடிக் கும்பல்களால் அடாவடி அபகரிப்பு. தக்களூரில் தனியார் சொத்துக்களை போலி ஆவணங்களால் அபகரித்த திருநள்ளாறு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவகுமார் மீது குற்றச்சாட்டு. திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா எம் எல் ஏ பரபரப்பு பேட்டி.

News September 20, 2024

ஒரு கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி

image

புதுச்சேரி டி என் பாளையம் முதல் அபிஷேகப்பாக்கம் வரை உள்ள பிரதான சாலையை புதிய தார் சாலையாக மாற்ற ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 20, 2024

புதுவையில் எம்பி காவல் நிலையத்தில் புகார்

image

காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக பேசிய பாஜக தலைவர், பாஜக மத்திய அமைச்சர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், மாநில பொதுச் செயலாளரும் உப்பளம் தொகுதி காங்கிரஸ் பொருப்பாளருமான இளையராஜா ஆகியோர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.

News September 20, 2024

புதுச்சேரியில் இனி பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும்

image

புதுச்சேரியில் கோடை விடுமுறை 12 நாட்கள் கடும் வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் முழுநாள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 5 சனிக்கிழமைகளில் முழுநாள் இயங்கிய நிலையில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டும் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News September 19, 2024

தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு மீண்டும் ஒத்திவைப்பு

image

புதுவை பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு கடந்த 30ஆம் தேதி கலந்தாய்வு அறிவிக்கப்பட்டிருந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றிய பின் கலந்தாய்வு நடத்த கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணியிட கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு நேற்றும், இன்றும் நடைபெறும் என கல்வித்துறை துணை இயக்குனர் ஆதர்ஷ் தெரிவித்திருந்தார். இந்த கலந்தாய்வு இரண்டாவது முறையாக நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!