India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி காவல்துறை சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் மன்ற நிகழ்ச்சியான பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வர உள்ளதை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சீனியர் எஸ்.பி கலைவாணன் நேற்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இதுவரை வழங்கப்பட்டு வந்த புத்தகப்பை மற்றும் காலணிக்குப் பதிலாக, ஆண்டு தோறும் ரூ.500 தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜா நகரில், புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு முன்னிலையில், முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், நமது மக்கள் கழகத்தின் நிர்வாகிகள், மனித நேய மக்கள் சேவை மைய நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!

கதிர்காமம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான்.” என்று புதுச்சேரி திமுக மேலிடப் பார்வையாளரும், கொள்கைப் பரப்புச் செயலருமான எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். இதில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். கதிர்காமம் தொகுதி செயலர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

காரைக்காலைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஹபிபு ராஜா. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடன் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடு சென்ற ஹபிபு ராஜா, அங்கு வேலை கஷ்டமாக இருப்பதாகக் கூறி, சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார். இதனால் கடன் சுமை அதிகரித்ததால் மன வேதனையில் ஹபிபு ராஜா பிப்.25 வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.