India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், தொடர்ந்து ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் விழாவில் பேசிய பிரதமர் சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

புதுச்சேரி, காங்கிரஸ்-திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்ததுடன், அரசியல் நிலையற்ற தன்மையும் நிலவியதாக தெரிவித்தார். தற்போதைய ஆட்சி வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது இந்தியா முழுவதும் உயர்தரமான உட்கட்டமைப்பை உருவாக்க, மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், விழா மேடையிலேயே பிரதமர் மோடியை சந்தித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரி நிர்வாக அதிகாரங்களில் பல கட்டுப்பாடுகள் இருப்பதால், மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த மாநில அந்தஸ்து அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கருப்புக்கொடி காட்டப்போவதாக வீடியோ வெளியிட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதலியார்பேட்டை காவல்துறையினர் இன்று காலை அவரது இல்லத்திற்குச் சென்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நாராயணசாமி (74), மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2006 தேர்தலில் காங்கிரஸில் சீட் கிடைக்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வில்லியனூர் தொகுதி எம்எல்ஏ-வாகவும், அரசு சாராய ஆலை தலைவராகவும் பணியாற்றினார்.

பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வந்தடைந்தார். புதுச்சேரி விமான நிலையத்தில் அவரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரவேற்றார். மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகை தந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் வருகை தந்துள்ளார்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

புதுச்சேரி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் அரசு சார்பில் இன்று (மார்ச் 1) நடக்கும் விழாவில், புதுச்சேரியில் உள்கட்டமைப்பு, நகர்ப்புற சேவைகள், தொழில்துறை மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு ரூ.2700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

புதுச்சேரி, பாகூரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்காலம் எனக் கூறி மர்மநபர் அனுப்பிய ஆன்லைன் வர்த்தக லிங்கில், பல்வேறு தவணைகளாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.