India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத தொழில்நுட்ப பணியிடங்களான 99 ஜூனியர் இன்ஜினியர், 69 ஓவர்சீர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. அதில், மொத்தம் 1,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான போட்டித் தேர்வு வரும் அக். 27ஆம் தேதி நடக்கும் என நிர்வாக சீர்திருத்த துறை நேற்று அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சைபர் க்ரைம் போலீசார் இந்தாண்டில், ஆன்லைன் மோசடி இழப்பு தொகை 35 கோடியே, 17 லட்சத்து, 96 ஆயிரத்து, 143 ரூபாய். இதில் ரூ.8 கோடியே, 81 லட்சத்து, 53 ஆயிரத்து, 179 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்தாண்டில் சைபர் கிரைம் மோசடியில், 3 ஆயிரத்து, 712 புகார்கள் பெறப்பட்டு, ரூ.8 கோடியே 81 லட்சத்து53 ஆயிரத்து 179 ரூபாய் மீட்டனர்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் முழுமையாக CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை முதல் பருவத் தேர்வுகள் வருகிற அக் 3ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணை வகுப்பு மற்றும் பாட வாரியாக வெளியிட்டுள்ளது. தேர்வுகள் முடிந்து புதுவை காரைக்கால் ஏனாம் பிராந்தியங்களில் அக்15ஆம் தேதி 20ஆம் தேதி வரை விடுமுறை. 21ஆம் தேதி மீண்டும் பள்ளி திறக்கப்படும்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு(எ) டீ பாபு என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சராக இருப்பவர் நமச்சிவாயம் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக மூலகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உடல்நலம் தேறி வருவதாக தகவல்.
புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினரால் பல்வேறு விதி மீறல்களுக்காக அபராத தொகையை செலுத்தும் படி அனைவருக்கும் SMS அனுப்பப்பட்டது. ஆனால் பலர் அபராத தொகையை செலுத்தவில்லை, அவர்கள் 1.10.2024 முதல் 7.10.2024-க்குள் அபராதத்தொகையை செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை மூலம் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் பஸ் நிலையம் கட்டுமான பணிக்காக கடந்த ஜூன் மாதம் ஏ.எப்.டி. மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், வரும் அக்.2 ஆம் தேதி, புதிய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு திட்டமிட்டது. புரட்டாசி மாதம் என்பதால் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பஸ் நிலையம் திறப்பு விழா நடத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டல். மதுரையை சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்காவின் மகன் அஷ்ரப் அலி (24) நேற்று கைது செய்தனர். புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை அஷ்ரப் அலியின் பெற்றோர் சிக்கா – சுமி, சித்தி ரவுடிபேடி சூர்யா ஆகியோர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளார்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் வணிகவரித்துறை கருத்தரங்க கூடத்தில் இன்று (25.09.2024) ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் அவர்களுக்கு அதிகாரிகள் விளக்கிக்கூறினர்.
புதுச்சேரி திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து கூலி தொழிலாளி. இவர் புதுச்சேரியில் பிளஸ் 1 படித்து வரும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து நேற்று மாரிமுத்துவை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.