India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு தரவரிசைப்படி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது விளையாட்டு வீரர்களுக்கு இளநிலை மேல்நிலைழுத்தர் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக 18.01.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 67 விரிவுரையாளர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 42 நபர்களுக்கு இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி,அமைச்சர் நமச்சிவாயம் இணைந்து பணி ஆணை வழங்கினார்கள். இதில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, “கேலோ இந்தியா திட்டம் மூலம் காரைக்காலில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்த ரூ20 கோடி மதிப்பிலான பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளது. ஒவ்வொரு கொம்யூனிலும் அரசு புறம்போக்கு நிலங்கள் தேர்ந்தெடுத்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்” என்றார்
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் இணைந்து ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு குரங்கு பெடல் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுப்ரேம் வீதியில் உள்ள அலையன் பிரான்சிஸ் கலையரங்கில் இன்று நடைபெறும் விழாவில் இயக்குனர் கமலக் கண்ணனுக்கு முதல்வர் ரங்கசாமி ஒரு லட்சம் ரொக்கம் விருதுகளை வழங்க உள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் காரைக்காலில் பணிபுரியும் நிலையில் வசிப்பிடப் பகுதிகளுக்கே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. பணியிட மாற்றத்துக்கான ஆதரவு எதிா்ப்பு காரணமாக பணியிட மாறுதல் உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது 234 பட்டதாரி தமிழ் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் நேற்று பணியிட மாற்றப்பட்டனர். இந்த உத்தரவை கல்வித்துறை அறிவித்தது.
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மீன் ஆடு மாடு கோழி உட்பட இறைச்சி கடைகளை மூட நகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி புதுவை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி இரண்டு இறைச்சி கடைகளுக்கு தலா ஆயிரம் அபராதமும் உழவர்கரை நகராட்சியில் ஒரு கடைக்கு ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க கோரி அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி தீபாவளிக்குள் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி விநியோகிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இலவச அரிசியை பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் கடந்த 10ஆம் தேதி இரவு 2 இருசக்கர வாகனங்கள் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக திருப்பட்டினம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டக் கொண்டிருந்த போது ஒரு வாகனத்தின் வண்டி எண் போலியான தெரியவந்தது. மேலும் விசாரணையில் 1 சிறுவன் உட்பட 4 பேர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்தனர்.
புதுவை பாகூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (65) பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பாகூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு ராதாகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க முயன்றதாக ராதாகிருஷ்ணன் மகன் கிருஷ்ணனை பாகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் ஒதிஞ்சாலை, சோனாம்பாளையம் சந்திப்பு சாலையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக, போதையில் பைக் ஓட்டி வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். மேலும், பைக்கில் ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், மொபைல் போன் பேசியபடியும், ஒரு பைக்கில் மூன்று பேர் உட்கார்ந்து வந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.
Sorry, no posts matched your criteria.