India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக புதுவை மக்கள் இணையதளம் வழியாக தள்ளுபடி விலையில் பட்டாசுகளை வாங்குவதற்கு ஆர்வம் செலுத்துகின்றனர். இதனை பயன்படுத்தி மோசடி கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இணையவழியில் பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று இணையவழி குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை மண்ணாடிப்பட்டு சதிஷ்குமாரிடம் ரூ.1 லட்சமும், ஆருத்ரா நகர், ரமேஷிடம் ரூ.7,763, பால் என்பவரிடம் ரூ.22,670, வில்லியனூர் தேவதாசிடம் ரூ.9,901, காரைக்கால் மணிகண்டனனிடம் ரூ.1 லட்சம், இந்துஜாவிடம் ரூ.40 ஆயிரம் என 7 பேரிடம் பல்வேறு பொய்யான காரணங்களை கூறி 3 லட்சம் வரை மர்ம நபர்கள் மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து மேற்கொண்டுள்ளனர்.
காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் நான்கு பேர் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று மாலை மகளிர் காவல் நிலையத்தில் உள்ள ரகசிய அறையில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை வைத்து காரைக்கால் போலீசார் 15 மணி நேரம் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் அங்கன்வாடி சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.
மாவட்ட ஆட்சியர், சம்பள பில் மற்றும் காய்கறி பில்களை காலத்தோடு செய்ய அந்த துறைக்கு அமைச்சக ஊழியர் நியமிக்கப்படுவார், முதியோர்கள் ஆதார் அட்டை பெற திருத்தம் செய்ய கிராமந்தோறும் சிறப்பு முகாம் அமைக்கப்படும் மற்ற கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார்.
புதுவை கோரிமேடு வாகன முனையம் அருகே ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோரிமேடு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த 7 நபர்களை விசாரித்த போது, பிரசாத் ராம், அஜித்குமார், புண்ணியமூர்த்தி, அருண்குமார், விக்கி, அரவிந்த் என்பது தெரிய வந்தது விசாரணையில் கொள்ளையடிக்க இருப்பது தெரியவந்தது.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் நலனுக்காக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் புதுச்சேரியில் – பெங்களுரு(ரூ. 600, இரவு 10.30) செல்ல 13.10.2024, புதுச்சேரி- மாஹே(ரூ.750- நேரம் மாலை 6) செல்ல 30.10.2024 மற்றும் மாஹே-புதுச்சேரிக்கு (ரூ. 750- நேரம் மதியம் 2.30) 3.11.2024 அன்று சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநில காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள், துணை உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 98 பேர் அதிரடியாக இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல்துறை தலைவர் ஷாலினி சிங் பிறப்பித்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக நகல் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மெயில் மூலம் நேற்று முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக வெளியான தகவலை அடுத்து அங்கு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் 1, உறுப்பினர்கள் 6 என கவுரவ அடிப்படையில் 7 பதவிகள் ன் நிரப்பப்பட உள்ளது. பதவிக்கு புதுவையை பூர்வீகமாக கொண்டவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என இயக்குனர் முத்துமீனா நேற்று தெரிவித்துள்ளார்.
லாஸ்பேட்டை கருவடிக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அப்துர் ரகுமான். அவரது மனைவி ஹசினா பேகம். இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஹசினாபேகம் மற்றும் அவரது தாய் உட்பட 5 பேர் , அப்துர் ரகுமான் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். போலீசார் நேற்று ஹசினா பேகம், அவரது தாய் உட்பட 5 பேர் மீது, வழக்குபதிந்தனர்.
Sorry, no posts matched your criteria.