India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த தவெக மாநாட்டில் சென்னையை சேர்ந்த சிலர் கலந்துகொண்டனர். மாநாடு முடிந்த பிறகு 3 கார்களில் புதுச்சேரி வந்தனர். வம்பாகீரப்பாளையம் பகுதியில் பாண்டி மெரினா பீச்சுக்கு சென்று மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் சாப்பாடு வாங்க சென்றபோது மீனவருடன் தகராறு ஏற்பட்டது. பின்னர், தவெகவினர் சக்திவேல் (50), வடிவேல் (35) ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில், 2 பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி பிள்ளைசாவடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை திங்கட்கிழமை 28ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சின்னக்காலாப்பட்டு, புதுநகர், பிள்ளை சாவடி அன்னை நகர் தொழில்நுட்ப மையம், பல்கலைக்கழக கலாச்சார வளாகம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் துறை இன்று அறிவித்துள்ளது.
புதுச்சேரி வேல்ராம்பட்டுவை சேர்ந்த பிரவின் கார் டிரைவர். இவர் ஜவகர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் தீபாவளி சீட்டு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கட்டினார். தீபாவளி நெருங்குவதால் சங்கர் வீட்டிற்கு சென்று சீட்டு பணத்தை கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டது.பிரவின் வீட்டிற்கு சென்ற சங்கர், அவரது மைத்துனர் தினேஷ், நண்பர் செழியன் ஆகியோர் பிரவினை கத்தியால் சரமாரியாக வெட்டினர் முதலியார்பேட்டை போலீசார் விசாரனை
புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக கட்டபட்டு வரும் ஆளுநர் மாளிகையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார் . அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
புதுவை மேட்டுப்பாளையம் பார்க் நேற்று மணவெளி செந்தில்குமார், சுந்தரமூர்த்தி, கணபதி, ஆகியோர் மது குடிக்க வந்தனர். மூவரும் பாரில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தனர். இதனை முருகன் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த மூவரும் முருகனை பீர்பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஷாஜகானை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை உயர்த்தி தருவதாக கூறினார்.அதனை ஏற்ற ஷாஜகான், ஓ.டி.பி., உள்ளிட்ட தகவல்களை மர்ம நபரிடம் கூறினார் அடுத்த சில நிமிடத்தில் அவரது அக்கவுண்டில் இருந்து ரூ. 87 ஆயிரம் பணம் திருடப்பட்டது ஷாஜகான் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகாரளித்தார்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பணியாற்றி வரும் 11 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. மேலும் 12 துணை தாசில்தார்களுக்கு தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.. இதற்கான உத்தரவை புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் வருவாய் துறை சிறப்பு செயலாருமான குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு பகுதியில் மளிகை கடைநடத்தி வருபவர் அந்தோணி ராஜ் இவர் தனது கடைக்கு வந்த 8 வயது சிறுமியை கடைக்குள் அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவந்தனர் இதனிடையே அவர் போலீசில் சரணடைந்தார்.
புதுச்சேரி எம்பி செல்வகணபதி செய்தி அறிக்கை: நான் புதுச்சேரி பாஜக மாநில தலைவராக எம்பியாக எனது பணிகளை சிறப்பாக செய்து வருகின்றேன் எனது வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாத சிலர் என் மீது அவதூறான செய்திகளை பரப்புகிறார்கள் சில தொலைக்காட்சிகள் சனிக்கிழமை 26.10.2024 அன்று எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சிபிசிஐடி வழக்கை காட்டி தவறான செய்திகளை ஒளி பரப்பி இருப்பது கண்டிக்கத்தக்கது
.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி அனைத்து அமைச்சர்களுக்கும் தலா 1,000 கிலோ இனிப்புகளும், 1,000 பட்டாசு பெட்டிகளும், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 500 கிலோ இனிப்புகளும், 500 பட்டாசு பெட்டிகளும் வழங்கி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.