India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஸ் நேரடியாக மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டார். முகாமில் 44 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் திருச்சியில் மண்டல அளவில் 6.9.2024 அன்று திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம் 15 டி மெக் டொனால்டு ரோடு கண்டோன்மெண்ட் (மத்திய பேருந்து நிலையம் அருகில்) நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ள வேண்டும்.மேலும் விவரங்களுக்கு | மாற்றுத்திறனாளி நல அலுவலக எண் 04328-225474 அழைக்கவும் என இன்று கலெக்டர் தகவல்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊராட்சி அளவில் போட்டிகள் 9.9.2024 முதல் 12.9.2024 வரை நடைபெற உள்ளது. வட்டார அளவில் 16.9.2024 முதல் 20.9.2024 வரை நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் 25.9.2024 அன்று நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 96599 35852 என்ற எண்ணை அழைக்கலாம்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள, நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்போது அங்கிருந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவிகளிடையே உரையாடினார். இந்நிகழ்வின் போது நகராட்சி ஆணையர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் மற்றும் கடைசி தேதி ஆகியவற்ற கீழ்கண்ட இணைய முகவரியில் https://districts.ecourts.gov.in perambalur பார்க்கலாம்.
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் கிளையின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் இலவச சணல் பை தயாரிக்கும் பயிற்சி வகுப்பு செப் 9 ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெறும். எழுதப் படிக்க தெரிந்த கிராம பஞ்சாயத்தை சார்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான பயிற்சி நேரம் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும் என பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
திமுக மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வி.எஸ்.பெரியசாமி திடீரென உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இறந்த செய்தி அறிந்து அவரது இல்லம் சென்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களுடன் அஞ்சலி செலுத்திய பொழுது. உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க. கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள். மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் அருகே செங்குணம் கைகாட்டி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் முயல் வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் முயல் இனங்கள் மற்றும் அவற்றின் இனப்பெருக்கமேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறை மற்றும் பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமர்சனத்திற்குரிய புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெறும் விளம்பர சுவரொட்டிகள் மற்றும் விளம்பர தட்டிகள் போன்றவைகள் வைக்கப்படுதல் கூடாது. மேலும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்யக்கூடாது. மத வழிபாட்டு இடங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்க கூடாது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமர்சனத்திற்குரிய புகைப்படங்கள் (ம) வாசகங்கள் இடம்பெறும் விளம்பர சுவரொட்டி, தட்டிகள் போன்றவை வைக்கப்படக்கூடாது. மேலும், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்யக்கூடாது. மீறி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.