India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, முருக்கன்குடி அரசு மருத்துவமனையில் இன்று (18.09.2024) மாலட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், நேரில் ஆய்வு மேற்கொண்டு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் சேசு மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட முருக்கன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று மனு மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்கம் சார்பில் பணி ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் ஓய்வு கால பண பலன்களை வழங்காமல் காலம் கடத்துவதை கண்டிப்பதாக கூறி பெரம்பலூர் தீரன்நகர் முன்பு நேற்று சாலையின் இருபுறமும் சங்கத்தினர் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் குன்னம் வட்டத்தில் இன்று (18.09.2024) நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிறுமத்தூர் ஊராட்சியில் பொதுமக்களின் தேவைகள் கோரிக்கைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தல் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் 18/9/2024 முதல் 15/10/2024 வரை 28 நாட்கள் தொடர்ந்து புருசெல்லோசிஸ் எனப்படும் கன்றுவீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இத்தடுப்பூசி 4 முதல் 8 மாதம் வரையிலான கிடேரி கன்றுகளுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று முன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் நடத்தினர். இதனால் பாதிப்பு சம்பவத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து அவர்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநிலவாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைகடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மிலாடிநபியினைமுன்னிட்டு 17.09.2024 அன்று ஒரு நாள் மட்டும் உலர் தினமாக (DRYDAY) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்தார்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.இந்நிகழ்வின்போது பல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.