India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு செஞ்சேரி காப்பு காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 6 போ் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது, எறும்பு தின்னியை விற்பனை செய்வதற்காக அவர்கள் வேட்டையாடி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூா் அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனர. வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் பாளையம் கிராம பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, கை.களத்தூா் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மருதை மகன் சின்னசாமி (67), தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
குன்னம் அருகேயுள்ள சித்தளி கிராமம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் மகேந்திரன் (24). இவர் பெரம்பலூர் தனியாா் டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் குன்னத்திலிருந்து சித்தளி கிராமத்துக்குச் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போதுஅரியலூருக்கு சிமெண்ட் ஏற்றச்சென்ற லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகே பேரளி கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி, மருவத்தூா் காவல் நிலைய எஸ் ஐ தலைமையில் பல்வேறு கடைகளில் நேற்று சோதனை செய்தனா். இதில் அய்யாசாமி (70) என்பவா் தனது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் ரூ. 1.61 லட்சம் மதிப்பிலான 262 கிலோ போதைப் பொருள்களை தெரியவந்தது. பின்னா், அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 15,700, போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தென்னிந்திய அளவிலான அஸ்விதா கேலோ இந்தியா மகளிர் டேக்வாண்டோ போட்டியில், பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்ட, விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தனது வாழ்த்துகளை இன்று (20.09.2024) தெரிவித்தார். இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். இதனால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் மருத்துவமனையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காக இன்று நடத்தப்பட உள்ள இலவச மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நாளை தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு நேரடியாக சந்திக்கும் தனியார் துறை சிறு வேலை வாய்ப்பு முகாம் நாளை ( 20/09/2024) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். முகாம் காலை 10 மணி அளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 2025 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் இணையதளத்தில் செப்டம்பர் 30ம் தேதி மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 25 க்கும் மேற்பட்ட நிறுவனகங்கள் கலந்து கொள்ளவுள்ளன. 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.