Perambalur

News September 6, 2024

பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 10.09.2024 அன்று காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என செயற்பொறியாளர் அசோக்குமார் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான அச்சு மற்றும் காட்சி ஊடக செய்தியாளர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தள கூட்டரங்கில் நாளை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செப்டம்பர் ஐந்தாம் தேதி இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

பெரம்பலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த கல்லூரி மாணவனின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று திட்டத்தின் பயன்கள் குறித்து கருத்துக்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கேட்டறிய உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செப்டம்பர் 5 ஆம் தேதி நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

காவலர் வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பு அலுவலர், காவல் வாகனங்களை ஆய்வு செய்து காவலர்களுக்கு அவற்றை பராமரிப்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் முன்னிலையில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலைமையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News September 5, 2024

கால்நடை மருந்தக கட்டிடத்தில் கலெக்டர் ஆய்வு

image

பாடாலூர் கால்நடை மருந்தக கட்டடத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்து சுற்றுச்சுவர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் மூலமாக விரைந்து பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கால்நடைத்துறை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தினார்.

News September 5, 2024

70 பேர் விடுதலைக்கு பாடுபட்ட வழக்கறிஞர்களுக்கு பாராட்டு

image

1998ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில், 70 பேர் மீது காவல்துறை வழக்கு பதிந்தது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து, அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 70 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், விடுதலைக்கு சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கு தமுமுக மற்றும் மமகவினர் பாராட்டு தெரிவித்தனர்.

News September 5, 2024

எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட எஸ்பி காவல் வாகனங்களை ஆய்வு செய்து அவற்றை பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.

News September 5, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு இளங்கலை சட்டம் படிப்பினை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை தரவேண்டிய கடைசி நாள் 13.09. 2024 ஆகும். விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட எஸ்பி-யடம் விண்ணப்பத்தினை நேரில் அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 5, 2024

விழிப்புணர்வு வாகனைத்தை துவக்கி வைத்த கலெக்டர்

image

மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரசுப்பள்ளிகளின் மாணாக்கர்களுக்கு விளக்கிடும் வகையில் மாவட்ட மகளிர் அதிகார மைய விழிப்புணர்வு வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், இன்று 05.09.2024 கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News September 5, 2024

கால்நடை மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு

image

பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட சிறுவாச்சூர் கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் தரம் குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.

error: Content is protected !!