India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்னம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வரும் 18ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதில் குன்னம் வட்டத்திற்குட்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்குமாறு கலெக்டர் நேற்று அறிவித்தார்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, நாளை(14/9/24) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பை தேசிய மக்கள் நீதிமன்றம் (NATIONAL LOK ADALAT) செய்ய உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்கு மற்றும் வங்கி கடனுதவி ஆகிய வழக்குகளில் தீர்வு கண்டு சமரசமாக செல்லாம்.
ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, திம்மூர் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹96.37 லட்சம் மதிப்பீட்டில் திம்மூர் முதல் கண்ணனூர் வரை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் தொடர்பாக இன்று 13.09.2024 மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஜெமின் பேரையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹.13.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் வளர்க்கும் நாற்றாங்கால் மையத்தை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று 13.09.2024 பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது. வாக்குச்சாவடி இடங்கள் சில பழுதடைந்து இருப்பதால் மாற்றி அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. இதில் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு மனு முகாமில் 53 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் என பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவில் உதவி கணினி இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க +2 அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்படுவர். இப்பணிக்கு வரும் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை நல குழுவில் காலியாக உள்ள உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப் பதாரர்கள் Perambalur.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 16.9.2024 தேதிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு 164, 2வது தளம் MMபிளாசா திருச்சி ரோடு பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கலெக்டர் தகவல்
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை பெற்ற துங்கபுரம் அ.மே.பள்ளி ஆசிரியர் ஜெ.ரவிச்சந்திரன், நக்கசேலம் அ. மே.பள்ளி ஆசிரியர் மெ.ஓம்.பிரகாஷ், தேனூர் அ. மே.பள்ளி ஆசிரியை க.சித்ரா, கொத்தவாசல் ஊ.ஒ.ந.பள்ளி ஆசிரியர் சி.இளவழகன், பிரம்மதேசம் தலைமை ஆசிரியை கே.பிரேமலதா, மா. ந.பள்ளி தலைமை ஆசிரியர் சி.சாம்பசிவம் ஆகியோர் தங்களது நல்லாசிரியர் விருதினை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீதிமன்ற உத்தரவுப்படி தமக்கு வழங்கிட வேண்டுமென்று, அரை நிர்வாணத்தில் உடலில் நாமம் அணிந்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தினர். பிறகு மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.