Perambalur

News September 28, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 75.074 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. சிறுதானியங்களில் 3.574 மெ.டன்கள் இருப்பும், பயறு வகைகளில் 7.612 மெ.டன்கள் இருப்பும், எண்ணெய்வித்து பயிர்களில் 19.240 மெ.டன்கள் இருப்பும், மாவட்டத்தில் தற்சமயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

News September 27, 2024

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

image

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ரங்கராஜ் என்பவரை விசாரணை செய்தபோது அவர் பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.500 மதிப்புள்ள 100 கிராம் அளவுள்ள 10 பொட்டலங்களை ( தலா 10 கிராம் )பறிமுதல் செய்த அரும்பாவூர் காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News September 27, 2024

பெரம்பலூரில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.09.2024) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு முன்பு டிரோன் மூலம் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு மருந்து தெளித்தல் குறித்த செயல்விளக்கம், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. விவசாயிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

News September 27, 2024

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட பசுமைக்குழு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் வனத்துறை மற்றும் பிற துறை அலுவலர்களுடனான மாவட்ட பசுமைக்குழுக்கூட்டம் இன்று (27.09.2024) பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வனத்துறை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News September 27, 2024

கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம், கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று(27.09.2024) சங்கத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள 152 வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.

News September 27, 2024

பெரம்பலூர் கலெக்டர் நல திட்ட உதவிகளை வழங்கினார்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 21 விவசாயிகளுக்கு அரசு மானிய உதவியுடன் கூடிய ரூபாய் 5.30 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான வேளாண் கருவிகளை இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

News September 27, 2024

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

image

திருச்சி மண்டலம் கலை பண்பாட்டுத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் குறித்த கலைப் போட்டிகள் பெரம்பலூர் மதன கோபாலபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News September 27, 2024

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட எஸ் பி ஆதர்ஷ் பச்சேரா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரு சமூகத்தினரிடையே பல்வேறு சூழல்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமைதி குழு அமைத்து சமரசப் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News September 27, 2024

சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.09.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News September 26, 2024

நாக்கை வெட்டுவதாக மிரட்டல் : பாஜக புகார்

image

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹச்.இராஜாவின் நாக்கை வெட்டினால் 50லட்சம் சன்மானம் வழங்கபடும் என்று பெரம்பலூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ் கூறினார். இதற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்ய கூறி பெரம்பலூர் பாஜக சார்பில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் தலைமையில் ஏடிஎஸ்பியிடம் இன்று (செப்.25) புகார் கொடுத்தனர்.

error: Content is protected !!