Perambalur

News October 1, 2024

பெரம்பலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலையம், தெரணி கிராமத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு, மணி என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான தனபால், குண்டுபிரபு (எ) பிரபு, பழனிவேல், சங்கர் ஆகியோருக்கு நேற்று பெரம்பலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் கூடிய தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

News September 30, 2024

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (30.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News September 30, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்)அனைத்து மதுபான சில்லறைக் கடைகளும், அவைகளுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள், மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்தும் அக்-02 காந்தியடிகள் பிறந்த தினமான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார்.

News September 30, 2024

பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News September 30, 2024

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு பயிற்சி

image

பெரம்பலூா் – எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், வீட்டு உபயோக சாதனங்கள் சேவை மற்றும் பழுது நீக்கும் பயிற்சி அக். 3ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இதில் 19 முதல் 45 வயதிற்குட்பட்ட சுய தொழில் தொடங்க ஆா்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 04328–277896, 8489065899 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளவும். SHAREIT

News September 30, 2024

துணை முதல்வருக்கு எம்பி அருண் நேரு வாழ்த்து

image

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி அருண் நேரு நேற்று துணை முதலமைச்சராக பதவி ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து துணை முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். உடன் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு இருந்தார்.

News September 30, 2024

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ.104 கோடி இழப்பீடு

image

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் குறித்த செயல்விளக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் ட்ரோன் செயல் விளக்கத்தை பாா்வையிட்டு, கடந்த 2023-24 ஆம் ஆண்டில் 34 ஆயிரத்து 506 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்த 32000 விவசாயிகளுக்கு ரூ. 104.44 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

News September 29, 2024

பெரம்பலூ மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் அக்டோபர் 9-ந்தேதி மாவட்ட ஆட்சியரின் தலைமையில்,மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக கோரிக்கை மனுக்கள் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, சத்திரமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சத்திரமனை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 29, 2024

பெரம்பலூர்: தொழில் முனைவோர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

image

அரசால் நடத்தப்படும் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் 1 ஆண்டு சான்றிதழ் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெரம்பலூர் ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, ஈடிஐஐ-டிஎன், தொழில் முனைவோா் சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. இந்த வகுப்பில் பங்கேற்க ரூ. 80,000 கட்டணம் செலுத்த வேண்டும். 21 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

News September 28, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

முதலமைச்சர் கோப்பைக்காக மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் இன்று காலை 10.15 மணிக்கு பரிசுகளை வழங்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!