Perambalur

News September 17, 2024

பெரம்பலூரில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் 18/9/2024 முதல் 15/10/2024 வரை 28 நாட்கள் தொடர்ந்து புருசெல்லோசிஸ் எனப்படும் கன்றுவீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இத்தடுப்பூசி 4 முதல் 8 மாதம் வரையிலான கிடேரி கன்றுகளுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News September 17, 2024

பெரம்பலூரில் திடீர் சாலை மறியல்

image

சற்று முன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் நடத்தினர். இதனால் பாதிப்பு சம்பவத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

News September 16, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து அவர்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News September 16, 2024

மிலாடி நபியினை முன்னிட்டு (டாஸ்மாக்) விடுமுறை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநிலவாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைகடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மிலாடிநபியினைமுன்னிட்டு 17.09.2024 அன்று ஒரு நாள் மட்டும் உலர் தினமாக (DRYDAY) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்தார்.

News September 16, 2024

பெரம்பலூரில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

image

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.இந்நிகழ்வின்போது பல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

News September 16, 2024

பெரம்பலூரில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

image

தமிழக அரசு தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற செப்.17 ஆம் நாள் செவ்வாய் கிழமை அன்று மிலாடி நபி அரசு விடுமுறை நாளாக இருப்பதனால் வேலை நாளான இன்று (16.09.2024) சமூக நீதி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் ஏற்கப்பட்டது.

News September 16, 2024

முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட்: பெரம்பலூர் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

image

பெரம்பலூரில் முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.வரதராஜன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

News September 15, 2024

பெரம்பலூரில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

image

பெரம்பலூர் தனியார் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம். இதில் நிறுவனத் தலைவர் கிறிஸ்டோபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. செயலர் முனைவர் மித்ரா முன்னிலை வகித்து ஓணம் பண்டிகையின் சிறப்பை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் வண்ண வண்ண பூக்களால் கோலமிட்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News September 15, 2024

பெரம்பலூரில் குறும்பட போட்டி: ஆட்சியர் அழைப்பு

image

போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு எனும் தலைப்பில் நடைபெறும் குறும்பட போட்டியில் பங்கேற்க, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் செப். 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10000, 2 ஆவது பரிசாக ரூ. 7000, 3 ஆவது பரிசாக ரூ. 5000 வழங்கப்படும். 5 நிமிடத்துக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும்.

News September 14, 2024

பெரம்பலூர்: 16 மையங்களில் 5,938 நபர்கள் தேர்வெழுதினர்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி 2 மற்றும் 2A தேர்வுகள் இன்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ் நேரில் பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வினை 5,938 நபர்கள் தேர்வெழுதினர்.

error: Content is protected !!