India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாரணமங்கலம் கிராமத்தில் சமூக வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் செல்லியம்மன் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவின் தொடக்கமாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவிழாவில் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக அனைவரும் தேர் திருவிழாவை கொண்டாட வேண்டும் என கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்டது.
கை.களத்தூர் அருகே உள்ள பெருநிலா கிராமத்தில் சந்திரசேகர் என்பவரது இரண்டு பசுமாடுகள் மர்மமான முறையில் இருந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு பசு மாடுகள் எப்படி இறந்தன என்பதை தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 25ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு இன்று பெரம்பலூரில் நடக்கும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமுக்கு வருகை தந்த, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் நேரில் சென்று வரவேற்று மரியாதை செய்தார். பெரம்பலூரில் நடக்கும் இம்முகாமில் ஏராளமான இளைஞர்களும், தனியார் தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து மானியக்கடன் பெற தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெற http://newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் CM ARISE திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுமை மையத்தின் சார்பில் நாளை நடத்தப்பட உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 120க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 20,000 மேற்பட்ட பணிகளை வழங்க உள்ளார்கள் என மாவட்ட நிர்வாகம் தகவல் அறிவித்தது. மேலும் கூடுதல் தகவலுக்கு தொலைபேசி 9499055913 எண்ணுக்கு விவரங்களை கேட்டு பயன்பெறலாம் என தெரிவித்தன. போன்நம்பர் சுவிட்ச் ஆப் இருப்பதால் வேதனை.
அனுக்கூரை சேர்ந்த சம்பத்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் வழக்குகள் தொடர்பாக கோர்ட்டிலும் ஆஜராகாமல் இருந்தார். இதனால் சம்பத்குமாரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து நேற்று போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைப்பதற்கு அழைத்து சென்றனர். சிறை வாசலில் சம்பத்குமார் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி பிடித்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் குறைதீா்க்கும் முகாம் நாளை (அக். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த முகாமில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காணலாம்.
Sorry, no posts matched your criteria.