Perambalur

News November 20, 2024

பெரம்பலூர்: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்

image

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பெரம்பலூர் வட்டம், வேலூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தல் குறித்து நியாவிலைக்கடை, குழந்தைகள் மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மேற்கொண்டார்.

News November 20, 2024

விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கு, டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHAREIT

News November 20, 2024

விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 20, 2024

ரேஷன் கடை வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் பணிகளுக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு நவம்பர் 25ஆம் தேதி துவங்கி, நவம்பர் 29 வரை பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேலும் நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்

News November 19, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடன் மற்றும் கல்வி கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நவம்பர் 19-ஆம் தேதியான இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர்

image

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய “புத்துளிர் 2024” மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற பெரம்பலூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News November 19, 2024

குழந்தைகள் நல குழுவிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதால் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதிப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை துறை அலுவலகத்திலும், http:/dsdcpimms.tn.gov.in இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

News November 19, 2024

உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT,IIM,IIIT,NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார்.

News November 19, 2024

பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றிதழ்களுடன் 29.11.2024 க்குள் மாவட்ட ஆட்சியரகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பயனடைய வேண்டுமென கலெக்டர் நேற்று தகவல் அளித்தார்.

News November 19, 2024

பெரம்பலூரில் 306 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நேற்று (18.11.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் 306 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!