Perambalur

News November 29, 2024

பெரம்பலூர் பாம்பு கடித்து விவசாய உயிரிழப்பு.

image

பெரம்பலூர் கீழக்கரை கிராமத்தை வேணுகோபால் மகன் நல்லுசாமி இருவரும் மாட்டிற்கு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது வேணுகோபாலை கட்டு விரியன் பாம்பு கடித்துள்ளது. கடித்த பாம்பை அடித்து எடுத்துக் கொண்டு நல்லுசாமி தந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிகிச்சையின் போது வேணுகோபால் பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 29, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் பெரம்பலூரில் ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில்’ 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு தகுதியுடையவர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களை வழங்கி விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 28, 2024

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

image

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம் அரசு வாகனத்தில் ஸ்கார்பியோ காரில் தனது சொந்த ஊரான நுத்தப்பூரில் இருந்து ஓட்டி வந்த போது வேப்பந்தட்டை வெண்பாவூர் பாரஸ்ட் வளைவில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சேர்மன் ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து அரும்பாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 28, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை முதல், இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சீதோஷண நிலை மாறி தற்போது குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

News November 28, 2024

மகளிருக்கான ஒளவையார் விருது பெற அழைப்பு

image

தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம், பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் மகளிருக்கு ஒளவையார் விருதும், ரூ.1,50,000 மதிப்புள்ள காசோலையும் வருடம்தோறும் முதலமைச்சரால் வழங்கப்படும். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டு ஒளவையார் விருது பெற தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 27, 2024

பெரம்பலூர் : மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மூலம் 11 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது

News November 27, 2024

பெரம்பலூரில் விவசாயிகள் நூதன போராட்டம்

image

பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற சர்க்கரை ஆலைபேரவைக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முக்காடு அணிந்து, காதுகளை மூடிக்கொண்டு கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எரயூர் சக்கரை ஆலையின் 47 வது பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. சக்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும். விவசாயிகளின் பங்கு 46.41 சதவீதமாக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

News November 27, 2024

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மார்ச் 8ஆம் தேதி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேற்று அறிவித்துள்ளார். வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News November 26, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.11.2024 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர் பாசனம் வேளாண்மை கடனுதவிகள் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றியும் முறையீடுகள் பற்றியும் விவாதிக்கப்படும் விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

அரசு பேருந்து மீது நெல் அறுவடை இயந்திரம் மோதி விபத்து

image

வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் ஆத்தூர் சாலையில் உள்ள மாடர்ன் ரைஸ் மில் அருகில் நேற்று இரவு ஆத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தின் மீது நெல் அறுக்கும் இயந்திர வாகனம் (ஹார்வெஸ்டிங்) மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனமும் சேதமடைந்தது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!