Perambalur

News September 7, 2025

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ், பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு உடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை இணைத்து செப்.,29-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

பெரம்பலூர்: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

image

பெரம்பலூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 6, 2025

பெரம்பலூர்: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

image

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

பெரம்பலூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

பெரம்பலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04328-224744 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 6, 2025

பெரம்பலூர் :அரசு தொடக்கப் பள்ளியில் தீ விபத்து

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பர்னிச்சர்கள் மற்றும் பழைய காகிதங்கள் எரிந்து சாம்பலானது. செப்டம்பர் 5 மாலை மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 6, 2025

பெரம்பலூர்: பெரியார் பட திறப்பு நிகழ்வு – நேரலை காணொலி

image

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கல்லைகழகல்த்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிலையில் அந்த காணொலி பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையில் நேரலை காணொலி நடைபெற்றது. இந்த காணொலியை சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் கண்டு களித்தனர்.

News September 5, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

பெரம்பலூர்: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> அதன் இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

பெரம்பலூர்: ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்த ஆட்சியர்

image

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் உயர்வான எதிர்காலத்திற்கு அடித்தளமாக இருக்கும் கல்வியை, அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

பெரம்பலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!