India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அங்கமுத்து நேற்று மொபட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவையூர் அருகே வளைவில் திரும்பிய போது, ஆரணிக்கு சென்ற அருணின் கார் அங்கமுத்து மீது மோதியதில், காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கடந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (டிச.9) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்துள்ளார். இந்த தேர்வை எளிதாக எதிர்கொள்ள அமைச்சர் சிவசங்கர் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில், சுமாா் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூா் போலீஸாா் இறந்தவரின் உடலை கைப்பற்றி, அங்குள்ள பிரேத கூடத்துக்கு அனுப்பிவைத்தனா். வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
கடை வாடகை மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவித சொத்து உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, ஜனவரி 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என வணிக சங்கத்தின் பேரமைப்பு தலைவர் ஏ.ம் விக்ரமராஜா நேற்று பெரம்பலூரில் நடந்த வணிகர் சங்க பேரமைப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
மங்களமேடு அடுத்த ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து இன்று மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவையூர் அருகே புதுக்கோட்டையில் இருந்து ஆரணிக்கு சென்ற கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின் வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் டிசம்பர் 10ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என செயற்பொறியாளர் அசோக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., கூட்ட அரங்கில், ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 1,771 பயனாளிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.
கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அடிதடி வழக்கின் குற்றவாளிகளான பூலாம்பாடியை சேர்ந்த ஆறுமுகம், ராஜேஷ், குமார், கோவிந்தராஜ், நாட்டார் என்கிற ராஜு, ஆதிமூலம் ஆகிய 6 பேருக்கு தலா 14 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி நேற்று உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. டிச 18, 19, 20 ஆகிய 3 நாட்களுக்கு அரசு பணியாளர்களுக்கு ஆட்சி மொழி ஆய்வும், டிச 23 வணிக நிறுவன அமைப்புகளை கொண்டு கூட்டமும், டிச 24 தேதி ஆட்சி மொழி தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. டிச 27ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு பட்டிமன்றம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மின் மோட்டார் பம்பு செட்டுகளை, தொலைதூரத்தில் இருந்து கைப்பேசி வழியாக இயக்கக்கூடிய கருவிகளை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு தண்ணீர்பந்தல் ரோவர் கல்லூரி பின்புறம் உள்ள வேளாண்மை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை நேரிலோ (அ) 9842470358, 9944850423 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.