Perambalur

News September 14, 2025

பெரம்பலூர் மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

image

பெரம்பலூர் மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <>இங்கே க்ளிக் <<>>செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 14, 2025

பெரம்பலூர் மக்களே.. வங்கியில் வேலை வாய்ப்பு!

image

பெரம்பலூர் மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!

News September 14, 2025

பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பரலூர் மாவட்டத்தில் குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் மாணவர்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயில <>tahdco.com<<>> என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 14, 2025

பெரம்பலூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து

image

பெரம்பலூரில் மாவட்டட்தில் தவெக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்தித்து பேச இருந்த நிலையில், நள்ளிரவு மேல் ஆகியும் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. 2 கி.மீ தூரத்தில் தொண்டர்கள் கூட்டம் இருந்ததால், பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் வாகனம் பெரம்பலூருக்குள் செல்லாமல் சென்னை நோக்கி புறப்பட்டது. இதனால், பல மணி நேரமாக விஜயை காண காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர்.

News September 14, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலை துறையின் மூலம் 5 இணையர்களுக்கு நாளை (14.09.2025) காலை 08.00 மணிக்கு இலவச திருமண நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி,
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

பெரம்பலூர்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

image

பெரம்பலூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து செப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 13, 2025

பெரம்பலூர்: உங்க வழக்குகளின் நிலை தெரிஞ்சுக்கனுமா??

image

பெரம்பலூர் மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 13, 2025

பெரம்பலூர்: உணவு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ் அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக ‘<>TN Food Safety Consumer App<<>>’ மூலம் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் அறிய பெரம்பலூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE IT NOW…

News September 13, 2025

பெரம்பலூர்: விஜய் வருகை-முன்னேற்பாடுகள் தீவிரம்

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று (13-09-2025) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பலூர் வருகை தருவதை முன்னிட்டு துறைமங்களம், வானொலி திடல், பெரம்பலூர் நான்கு ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டும், கொடிகள் கட்டப்பட்டும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

News September 13, 2025

பெரம்பலூர்: இழப்பீடு பணத்தை ஏமாற்றிய 2 பேர் கைது

image

ஒகளூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (28) என்பவர் தனது தந்தை வெளிநாட்டில் வேலைபார்த்த போது உடல்நிலை சரியில்லாமல் சொந்த ஊருக்கு அனுப்பி, அவரது வங்கி கணக்கிற்கு ரூ.19,09,004 இழப்பீட்டு தொகையாக வெளிநாட்டில் இருந்து கிடைத்ததாகவும், அதனை தனது அண்ணி, அவரது உறவினர்கள் சேர்ந்து தனக்குத் தெரியாமல் ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில், கதிர்வேல் (65), ராஜேஸ்வரி (52) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!