India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினை கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் வரை 25 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. தொழில் துவங்க ஆர்வமுள்ள கைவினைக் கலைஞர்கள் msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்.
பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழு கூட்டம் இன்று (17.12.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் பொருட்களான வெங்காயம், பருத்தி, மக்காசோளம் மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச.17) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் பி.ரவிக்குமாா் (சிறுவாச்சூா்), பொ.செல்வராஜ் (பெரம்பலூா்), கி. மாணிக்கம் (கிருஷ்ணாபுரம்) ஆகியோா் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) & வர்த்தகத் துறையுடன் இணைந்து நடத்தக்கூடிய பயிற்றுநர்களுக்கான ஒருநாள் பயிற்சி முதல்வர் முனைவர் து.சேகர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் 25 பேர் கலந்து கொண்டனர்.
இன்று (16.12.2024) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில்,நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்வின்போது பல்வேறுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெரம்பலூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை 1600 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் வம்சம் வந்த தூங்கானை மறவன் அரசன் கட்டியது. இவருக்கு பின் பல அரசர்கள் இக்கோட்டையில் இருந்து ஆட்சிபுரிந்தனர். பின்னர் இந்த கோட்டை ஆற்காடு நவாப் கைப்பற்றினார். 1751இல் வால்கண்டா போரில் இறந்தவர்கள் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டனர். பல போர்களை கண்ட கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
பசும்பலூர் கிராமத்தில் சிங்காரவேலு-சந்தியா என்றவர்களின் குழந்தையை தனியார் பள்ளிக்கு அனுப்புவதற்காக, சந்தியா தனது இரண்டரை வயது ஆண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டரை வயது ஆண் குழந்தை தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து கைகளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சி நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் டிசம்பர் 13,14 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்தால் டிசம்பர் 13 அன்று நடக்கவிருந்த 12ஆம் வகுப்பு கணினிஅறிவியல்,வேளாண்மை பதிவியல் மற்றும் 10ஆம் வகுப்பு ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் நடைபெறாததால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் சுற்றியுள்ள பல கிராமப்புறங்களில் இருந்து வரும் மழைநீர் இந்த மருதையாறு வழியாக செல்கிறது. இந்த மருதையாறு வாய்க்கால்கள் முழுவதும் சீமைகருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளது. இதனால் மழைநீர் அரியலூர் செல்லும் சாலை முழுவதும் நிரம்பி வழிகிறது.. இதனால் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் அரியலூர் செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேப்பந்தட்டை வட்டத்தில் வெங்கலம் பெரிய ஏரியில் மதகு அருகே உள்ள கரை சீரமைக்கப்பட்டுள்ளதையும், விசுவக்குடி நீர் தேக்கம் பாதுகாப்பு குறித்தும், அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் தொடர்பாக, இன்று (13.12.2024) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.