India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 1,299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் சார்பில் பயிற்சி வகுப்புகள் வரும் 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் சேக் அப்துல்லா என்பவர் தனது சொந்தமான பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்றது தெரியவந்தது. அவரை இன்று போலீசார் கைது செய்து அவரிடமிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு அமிர்தகடேஸ்வரரும், அபிராமி அம்மையாரும் மூலவர்களாக உள்ளனர். தன்னை நாடி வந்த மார்க்கண்டேயனின் உயிரை எமனிடம் இருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள சிவனுக்கு பாசக்கயிறு தடம் இருப்பாத கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்
தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) <
ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் 1 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 20 அங்கன்வாடி உதவியாளர்கள் இடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, <
பெரம்பலூர் மாவட்டம், மாவிலிங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த இவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதில் மனமுடைந்த செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஏ.30ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இயந்திரங்கள், மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாமென கலெக்டர் அறிவித்துள்ளார்.
▶பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர்: 9445000610, ▶வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர்: 9445000611, ▶குன்னம் வருவாய் வட்டாட்சியர்: 9445000612, ▶ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர்: 7825873404, ▶பெரம்பலூர் தனி வட்டாட்சியர்: 9500402345, ▶வேப்பந்தட்டை தனி வட்டாட்சியர்: 9994955880, ▶குன்னம் தனி வட்டாட்சியர்: 9443940427, ▶ஆலத்தூர் தனி வட்டாட்சியர்: 9842622455. இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
பெரம்பலூர் கபாணி நகரைச் சேர்ந்தவர் நல்லுசாமி (31). இவர் தனது உறவினரான கணபதி நகரைச் சேர்ந்த சிவராமலிங்கம்(44) என்பவருக்கு கடனாக ரூ.1 கோடியே 52 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் நல்லுசாமியை ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக நல்லுசாமி புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிவராமலிங்கத்தை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.