India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 7ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட மாறுதல் பெறலாம்.
பெரம்பலூர் மாவட்டம் மருதடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை முடித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு 40 வருடம் சிறை தண்டனை (ம) ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நேற்று நீதிமன்ற உத்தரவிட்டது.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <
பெரம்பலூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <
பெரம்பலூர் மக்களே படித்த படிப்புக்கு Skill இல்லாமல் வேலை இன்றி இருப்பவரா? தமிழக அரசு இலவச பயிற்சி அளித்து வேலைவாய்ப்பையும் வாங்கி தருகிறது. 12th முடித்திருந்தாள் போதும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் உங்கள் Skill வளர்த்துக்கொண்டு IT நிறுவனங்களில் பணியாற்றலாம். இங்கே <
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வேலூர், அரும்பாவூர், அசூர், நக்கசேலம் ஆகிய கிராமங்களில் வருகிற மே.10ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வளங்கள் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.
மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் கத்தாழை மேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 70 ஆடுகள் கடந்த 18ஆம் தேதி காணாமல் போனது. இதுகுறித்து கருப்பையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன், பிரபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சியில் இன்று (மே.01) கிராம சபை கூட்டம் நடைபெற்றது.பின்பு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எளம்பலூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிகளை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கதர் ஆடை அணிவித்து, பரிசு வழங்கி சிறப்பித்தார்.
Sorry, no posts matched your criteria.