Perambalur

News September 26, 2025

பெரம்பலூர்: குடும்ப வன்முறையா? இத பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9488018205) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News September 26, 2025

பெரம்பலூர்: தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற அழைப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக தங்களை இணைத்துக்கொண்டு, அவர்கள் ஆற்றிவரும் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News September 26, 2025

பெரம்பலூர்: மூன்று மாதங்களில் ரூ.44 லட்சம் காணிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் காணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கோயிலில் உள்ள 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டுப் பணம் ஆகியவை நேற்று (செப்.25) எண்ணப்பட்டது. இதில் ரூ.44 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 26, 2025

பெரம்பலூர்: சுற்றுலா தின கொண்டாட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பாக உலக சுற்றுலா தினம் நாளை (27.9.2025) வாலிகண்டபுரம் வாலீஸ்வரன் கோயிலில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வரலாற்று ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, வாலிகண்டபுரம் கோயிலின் தொண்மை, வரலாற்று சிறப்பம்சம் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். இந்த விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 26, 2025

பெரம்பலூர் மக்களே இதை செய்தால் கரண்ட் பில் வராது!

image

பெரம்பலூர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். <>www.pmsuryaghar.gov.in<<>> என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, பின்பு உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவகத்தை அணுகவும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 26, 2025

பெரம்பலூர்: நெடுந்தூர ஓட்டப்போட்டி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி 27.09.2025ம் தேதி அன்று காலை 8 மணி அளவில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தின் அருகில் நடைபெறவுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட அலுவலரை 7401703516 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 26, 2025

பெரம்பலூர்: மிதிவண்டிப் போட்டி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டிகள் 28.09.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 7:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7401703516 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 26, 2025

பெரம்பலூர்: தந்தை கண் முன் மகளுக்கு நடந்த சோகம்!

image

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி சாலை சுகனேஷ் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (61). இவரது மகள் ஆயிஷா பானு (27). இவர்கள் நேற்று காலை பைக்கில் திருச்சி காவிரி ஆற்றுப்பாலம் அருகே ஓடத்துறை ரயில்வே பாலம் இறக்கத்தில் வந்தபோது, பின்னால் அரியலூரிலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து மோதியதில் ஆயிஷா பானு தனது தந்தை கண் முன்னே தலை நசுங்கி பலியானார்.

News September 26, 2025

பெரம்பலூர்: மிதிவண்டிப் போட்டி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டிகள் (28.09.2025) அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7401703516 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

News September 26, 2025

பெரம்பலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் (25.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!